Thursday 28 March 2013

கவிதை கற்பழிப்புகள்



நானும் ப்ரவீன் வெங்கடேஷும் ஃபேஸ்புக்கில் சில ப்ராஜக்ட்டில் இறங்கலாம் என்று முடிவில் இருக்கிறோம்... சிலரை காசி, ராமேஸ்வரம் அனுப்புவதே, எங்களின் மேலான குறிக்கோள்... அந்த வகையில் இது கவிதை எழுதுவோருக்கான அறிய வாய்ப்பு, பயன் படுத்தி கொள்ளுங்கள்.... தன்மானத்தில் தற்கொலை செய்து கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது...


1)   தை
விதை
கவிதை

2)   கவிதை
விதை
தை

3)   பாள்
பாழ்
பால்

போட்டது தாழ்ப்பாள்
ஆனது பாழ்
பசும்பால்

கள்ள  உறவிற்காக  போட்டது  தாழ்ப்பாள்
குடும்பம்  ஆனது  பாழ்
ஊற்றிவிட்டார்கள் பசும்பால் !

4)   சண்டையிட்டேன்
விட்டுக் கொடுத்தாய்...

சண்டையிட்டேன்
விட்டுக் கொடுத்தாய்...

சண்டையிட்டேன்
விட்டுக் கொடுத்தாய்...

விட்டுக்கொடுக்காமல் சண்டையிடுகிறேன்
விட்டுக்கொடுக்கும் வாய்ப்பை உனக்கு விட்டுக்கொடுக்க...

5)   கீப் சம் பாசம்...
ஆகமாட்டாய் நீ மோசம்...

6)   கம்பன் இருந்திருந்தால் காறி துப்பியிருப்பான்,
பாரதி இருந்திருந்தால் பட்டையை கிளப்பியிருப்பான்,
ஷேக்ஸ்பியர் இருந்திருந்தால் சேர்த்து வச்சு அடித்திருப்பான்,

உன் தங்கச்சியையும் டாவடிப்பது தெரிந்தால்...

7)   தேகம்
மேகம்
ஆகும்

ஆகும்
தேகம்
மேகம்

மேகம்
ஆகும்
தேகம்

தேகம்
மேகம்
ஆகும்

8)   தரம்...
நிரந்தரம்...
நிறம் தரம்...
நிராதாரம்..

9)   கனிவு ஒழுகும் பேச்சினை கொண்ட நல்லுள்ளமாக இருக்கலாம்,
பணிவு அறிந்த உலகினை ஆளும் அறிவொளியாக இருக்கலாம்,
உயர்வு நோக்கி நகரும் நாளைய உலகின் ஒளிவிளக்காக இருக்கலாம்,
துணிவு அறியா பால்முகம் மாறா பச்சிளக் குழந்தையாக இருக்கலாம்,

எவராயினும் இருக்கலாம்

சாலை விதி மீறி வந்த என் 85 கிமீ வேக வண்டி மோதி பறப்பவராய்

முத்துக்களை ஒத்த மணலை விழிகள் பாராமல் இருந்திருக்கலாம்,
சொத்துக்கள் வீணாகிறதென வேகத்தடையில் வர்ணம் பூசாததாலும் இருக்கலாம்,
கொத்துகளாய் முன் செல்லும் கனரக வண்டிகளை முந்தி செல்வதற்கான உத்வேகமாய் இருக்கலாம்,
சத்துக்கள் அற்ற சாலை விதிமுறைகளாக கூட இருக்கலாம்,

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

மரண படுக்கையில் இருக்கும் உங்கள் கரம் பற்றி நான் மன்னிப்பு கேட்கும் தருணத்தை நான் நொந்து கொள்ள

பின்னால் வரும் என் வண்டியை பார்க்காமல் சாலையை கடக்கும் உங்கள் அலட்சியமாய் இருக்கலாம்,
முன்னால் வரும் உங்கள் வண்டியின் விளக்கு தரும் அபரித வெளிச்சமாக இருக்கலாம்,
கண்ணால் சைகை காட்டிய பின்னரும் சாலையை கடக்கும் உங்களின் திமிராக இருக்கலாம்,
எந்நாள் தான் புத்தி வருமோ இந்த முட்டாள் ஜென்மங்களுக்கு என்ற ஆற்றாமையாக இருக்கலாம்,

எதுவாயினும் இருக்கலாம்

பாடம் புகட்ட மோதியதன் விளைவாய், நான் உங்கள் ஈமச்சடங்கிற்கு அளிக்கும் தண்டப்பணம்

பணம் உங்களுக்கு அற்பமான ஒன்று எனவும்,
எனக்கு அற்புதமான ஒன்று எனவும்,
செத்து மடிந்து தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சொல்லுங்கள்,
நான் வந்து கொண்டிருக்கிறேன் 80 கிமீ வேகத்தில்...




டெரர் ஓவர்.... :)

No comments:

Post a Comment