Monday 28 April 2014

Other face of Vel tech's


பெரும்பாலான கல்லூரி விடுதிகளில், செல்போன் உபயோகிக்க எந்த தடையும் இருப்பதில்லை. தடைகள் இருக்கும் கல்லூரிகளும், தடையை விலக்கி கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் செல்போன் இல்லாத வாழ்க்கை என்பது நம் நிகழ்கால வாழ்வில் சாத்தியமில்லாதது. இந்த கூற்று உண்மையோ இல்லையோ, அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதாக எல்லோராலும் நம்ப படுகிறது. அதனாலேயே செல்போனுக்கு எதிரான கெடுபிடிகள் கிட்டத்தட்ட அடங்கிவிட்டது.

ஆனால் இன்னமும் சில கல்லூரிகள், தங்களது செல்போன் தடைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலே இருக்கின்றன. நல்லது. அதை பற்றி பிரச்சினை இல்லை. தங்கள் கல்லூரியின் discipline விஷயத்தில் கறாராக இருக்கிறோம் என்று அவர்கள் சொல்லலாம். அவ்வாறு விதிமுறைகளுக்கு மீறி செல்போன் பயன்படுத்தினால் அதை கையகப்படுத்தலாம். கையகப்படுத்திய செல்போனை பின்னர் எச்சரிக்கை செய்து திரும்ப கொடுக்கலாம், அல்லது பெற்றோரை கூப்பிட்டு அவர்களிடமும் ஒப்படைக்கலாம். ஏன், மாணவர்கள் கண் முன்னாலே அதை சுக்கு நூறாக உடைத்தும் போடலாம். அது வரை அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் எந்த அடிப்படையில் மாணவர்களிடமிருந்து கையகப்படுத்திய செல்போன்களில் இருக்கும் தகவல்களை ஆசிரியர்கள் பார்க்க முடியும்? எந்த ஒரு விதியும் அதை அனுமதிப்பதில்லை. அப்படி செய்தால் அது ஒரு தனி மனித உரிமை மீறல். ஆனால் அதை தான் பெரும்பாலான ஆசிரிய பெருமக்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி செய்து வருகிறார்கள்.

பெண்களும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை.

கொஞ்ச நாள் முன்பு நடந்த சம்பவம் இது...

வேல் டெக் குழுமத்தின் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஒரு மாணவியின் பெயர் திவ்யா. இவர் கல்லூரியின் விடுதியிலே தங்கி பயிலும் மாணவி ஆவார். study time ல் மொபைல் வைத்திருந்த காரணத்திற்காக கௌசிகா என்ற ஹாஸ்டல் வார்டன், திவ்யாவின் மொபைல் போனை பறிமுதல் செய்திருக்கிறார். பறிமுதல் செய்து அந்த மொபைலில் உள்ள மெசேஜ்களை படித்து திவ்யாவின் ஆண் நண்பரின் மெசேஜ்களை படித்து, திவ்யாவை தேவையே இல்லாமல் மிரட்டியுள்ளார். திவ்யாவின் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று அச்சுறுத்தி இருக்கிறார். அப்போதே அவளின் பெற்றோரிடம் சொல்லியாவது தொலைத்திருக்கலாம். அங்கேயே விஷயம் முடிந்திருக்கும். இந்த விஷயத்தை சுஜாதா என்னும் தலைமை வார்டன் காதுகளுக்கு எடுத்து சென்று அச்சுறுத்த பட்டிருக்கிறார்.

அடுத்த நாள் காலை அந்த மாணவி கல்லூரி கிளம்பும் போதும் சுஜாதா அவரை வழிமறித்து, "நீயெல்லாம் காலேஜுக்கு போய் என்ன பண்ண போற?" என்ற ரீதியில் அம்மாணவி அவமானப்படும் வகையில் மாணவிகள் முன்னிலையில் திட்டி, திரும்ப ஹாஸ்டலுக்கு அனுப்பியுள்ளார். ஹாஸ்டலுக்கு திரும்பிய திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் திவ்யா தனது துப்பட்டாவை பயன்படுத்தி தான் தூக்கு போட முயற்சித்திருக்கிறார். ஆனால் அது அறுந்து விழுந்து இருக்கிறது. நியாயமாக, அப்போதே அந்த மாணவிக்கு உயிர் பயம் வந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், திரும்பவும் எங்கயோ சேலையை தேடி பிடித்து தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இத்தனைக்கும் திவ்யா ஒரு முதலாம் ஆண்டு மாணவி, செத்து மடிந்து இவ்வுலகில் இருந்து தப்பிக்க அவ்வளவு தீவிரம் காட்டியிருக்கிறாள்.

அதன்பின் எல்லாமே வழக்கமான நாடகங்கள் தான்...

post-modem report ல் பெண்ணின் நடத்தை குறித்து மருத்துவர்கள், இழிவான ரிப்போர்ட் கொடுத்து அதன் காரணமான மன அழுத்தம் என்று எழுதி கொடுத்து விட்டனர்.

கோபம் கொண்ட மாணவர்களும் மாணவிகளும் அன்று மாலை 6 மணி  முதல் கல்லூரி விடுதிக்குள் நுழையாமல் ஸ்ட்ரைக் செய்தனர். 1200 பேருக்கு மேல் கூட்டம் கூடி விட்டது. போலிஸ் வரவழைக்க பட்டனர். பேச்சுவார்த்தையின் போது, யாரோ போலீசாரை தாக்க, எல்லோருக்கும் லத்தி சார்ஜ் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கும் கூட...

மாணவர்கள் 5 கிமீ வரை ஓடி வந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய நிலை. சிக்கியவர்களுக்கும், கெஞ்சியவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத வகையில் கிடைத்த அடிகள், மருத்துவமனையில் படுக்க வைத்தது.

அடுத்த நாள் தான் சுஜாதாவையும், கௌசிகாவையும் போலீஸ் கைது செய்தது.

அதற்கடுத்த நாளில் இருந்து கல்லூரி காலவரையின்றி விடுமுறை அளித்து மூடப்பட்டது. அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கம் போல் சென்றவர்களை அங்கிருந்த பெரும் போலீஸ் கும்பல் விரட்டியடித்தது. ஆவடி முழுதும் போலீஸ் பரபரத்தது. விடுதியில் உள்ள மாணவ மாணவிகளையும் வீட்டிற்கு அனுப்பி விடப்பட்டனர்.

இன்னமும் காலேஜ் பலத்த பாதுகாப்புடன் மூடி தான் கிடக்கிறது.

மீடியாக்கள் வழக்கம்போல கண்மூடி கொண்டது. 30க்கும் மேற்பட்ட மீடியாக்கள் இயங்கும் இந்த பரபரப்பான தமிழகத்தில் வெறும் ஒன்றிரண்டு மீடியாக்கள் மட்டும்தான் இது பற்றி பேசியது. அவர்களும் பூசி மழுப்பி மாணவி தற்கொலை என்று மட்டுமே அறிவித்தார்கள்.

அநேகமாக இன்னும் கொஞ்ச நாட்களில் காலேஜ் திறக்கப்பட்டு எல்லோருக்கும் செமஸ்டர் எக்ஸாம் நடக்கலாம்.

செமஸ்டர் முடிந்து, எந்த பேப்பரை திருப்பினாலும், எல்லா சேனல்களிலும் வேல் டெக் விளம்பரங்கள் ஜொலிக்கலாம்...





Nimirndhu nil

நிமிர்ந்து நில் ஓர் சிறப்பான படமாக வந்திருக்க கூடிய ஒன்று. சிவாஜி படத்திற்கும், நிமிர்ந்து நில்  படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தான் நினைக்கிறேன். சிவாஜி படம் ஏன் மக்களை முகம் சுளிக்க வைத்தது என்று மேலோட்டமாக ஆராய்ந்து இருந்தாலே, நிமிர்ந்து நில் படம் உண்மையாகவே நிமிர்ந்து நின்றிருக்கும்.

இரண்டு படத்திலும் நாயகன் ஆனவன், ஒரு சராசரி குடிமகனை பிரதிபலிப்பவனாக இருக்கிறான். இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு, ஒரு க்ளாஸிக் சினிமாவிற்கான எதிர்பார்ப்பை தன்னிச்சையாகவே வரவழைக்கிறது. மிக முக்கியமாக படம் பார்க்கும் மக்கள், தம்மை மிக எளிதாக நாயகனுடன் பொருத்தி பார்க்கிறார்கள்.

முதல் பாதியின் முடிவில், நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சிறப்பாக தொகுத்து வழங்கி விட்டு, பிற்பாதியில் அத்தனை பிரச்சனைகளையும் நாயகன் ஜஸ்ட் லைக் தட் தனது ஹீரோயிச சாயம் கொண்டு சமாளிப்பது மக்களால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது. அங்கேயே இந்த படம் தனது தனித்துவத்தை இழந்து, இது ஒரு ஃபேக் மூவி என்று மக்களுக்கு புரிந்து விடுகிறது.

அது வரை, தம்மை நாயகனுடன் பொருத்தி பார்த்து, பிரச்ச்னைகளுக்கு என்ன தான் தீர்வு என்று மக்கள் ஆவலுடன் திரையை நோக்குகையில், ஒரு சராசரி மனிதனால் சாத்தியமே இல்லாத ஒன்றை சொல்லி காதில் பூ சுத்துகையில் தான் கடுப்பாகி போகிறார்கள்.  ஒன்னுத்துக்கும் உதவாத கமர்ஷியல் படத்தை ஏதோ புரட்சி படம் போல் பில்ட் அப் கொடுத்தது தான் படத்திற்கு எதிராக வேலை செய்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

ஏதோ சமுதாய விழிப்புணர்விற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட படம் போல் ஆங்காங்கே பாசாங்கு செய்து விட்டு, கடைசியில் எல்லாமே வியாபார யுக்தி என்று தெரிய வரும் போது, நமக்கே நம் மீது கடுப்பாக வந்து தொலைக்கிறது. விஷயம் என்னவென்றால், நம் நிகழ்கால பிரச்சனைகளை நல்லபடியாக பதிவு செய்த இவர்கள், திரைக்கதையை ஓட்ட தெரியாமல் எங்கோ புளிய மரத்தில் விட்டு விட்டார்கள். பதிவு செய்ததோடு நிறுத்தி தொலைத்திருக்கலாம், ஆர்ட் மூவி அந்தஸ்தாவது கிடைத்திருக்கும். ஆனால் சில்லறை புரளாது, அதற்காக டபுள் ரோல், குத்து பாட்டு, ஆக்‌ஷன் சீக்குவன்ஸ், அது இது என்று அலைக்கழித்து விட்டனர்.

எல்லாம் முடித்து, உங்களை நீங்களே செதுக்கி கொள்ள வேண்டும் என்று மெஸேஜ் வேறு... வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று நூறு நூறு ரூபாயை மக்களிடம் வசூலித்து, கடைசியில் எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு மட்டும்தான் கடவுள் தெரியும் என்று சொல்ல, எல்லோரும் இல்லாத கடவுளை தரிசித்து வருவார்கள்.

அதுபோல், இந்த மெஸேஜ் ஒரு சிறப்பான மெஸேஜாக இருந்தாலும், பிரச்சனைக்கான தீர்வை சொல்லவில்லை. இருந்தாலும் மெஸேஜ் சிறப்பாக இருக்கிறதே என்று கேள்வி ஏதும் கேட்காமல் வர வேண்டிய நிலைக்கு ஆளாகின்றோம்.

நான் கேட்கிறேன் , ஜெயம் ரவி இந்த படத்தில் அப்பழுக்கில்லாத, கள்ளம் அறியா புனித ஆத்மா... அவர் ஏன் தன்னை தானே திருத்தி கொள்ள வேண்டி, தன்னை தானே சுத்தியால் அடித்து கொள்கிறார். ஒன்றும் புரியவில்லை.

தற்போது வந்து கொண்டிருக்கும் குப்பை தமிழ் சினிமாக்களில், இது ஓரளவுக்கு தேறுகிறது. அட்லீஸ்ட் எழுந்து ஓடும் அளவிற்காவது இல்லாமல் இருக்கிறது. அதுவரை நிம்மதி.



Accidents



சுத்தி முத்தி கேள்விப்படும் சமாச்சாரங்கள் அனைத்தும் தாறுமாறாக இருக்கின்றன.

1) தெரிந்த பாட்டி ஒருவரும், அவரது மகளும் பாட்டிக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு திரும்ப நடந்து வந்திருக்கிறார்கள். யாரோ ஒரு ஓவர் ஸ்பீடு குடிமகன், வந்த ஸ்பீடில் தனது இடது ஹேண்டில் பாரால் பாட்டியை லைட்டாக தட்டி விட்டு, அவன் பாட்டிற்கு விர்ர்ர்ரென்று பறந்து விட்டான். பாட்டிக்கு கை முறிவு, திரும்ப மருத்துவமனைக்கே நடந்து கையில் கட்டு போட்டு கொண்டு வீடு திரும்பினார்.

2) மாமா ஒருவர் சமீபத்தில் திருப்பதி போய் வந்தார். அவரது வீட்டருகே பட்டறை ஒன்று இருக்கிறது. அந்த பட்டறை ஆட்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு லட்டு கொடுக்க உள்ளே நுழைந்திருக்கிறார், கொடுத்து விட்டு வெளியில் வருகையில் வேட்டி எதிலோ பட்டு இழுக்க, தடுமாறி கீழே விழுந்திருக்கிறார், விழுந்த இடத்தில் ஒரு கம்பி, அது கையில் ஏறி, பலத்த காயம். 9 தையல் போட்டிருக்கிறார்கள்.

3) என்னுடைய பெரியம்மாவுக்கு தெரிந்த ஒருவர் கிருஷ்ணகிரியில் அவரது வீட்டில் க்ரைண்டரில் மாவு ஆட்டி கொண்டிருந்தார். அவரது உறவினர் ஒருவர் பெங்களூர்  நாராயண ஹிருதாலயாவில் என்ன காரணத்திற்காகவோ அட்மிட் ஆகி இருப்பதாக போன் வரவே, போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி இருக்கிறார். மருத்துவமனை போய் பேஷண்ட்டை பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தவரை ஒரு க்ரூப் ஃப்ரீ செக் அப் செஞ்சிக்கோங்க என்று மடக்கி இருக்கிறது. நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு அதெல்லாம் வேணாம் என்று சொல்லியவரை வம்படியாக செக் அப் செய்து விட்டு, ரிசல்ட்டுக்காக ஒரு இடத்தில் வெய்ட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். உட்கார்ந்திருந்தவர் அங்கேயே Low BP வந்து இறந்துவிட்டார். வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருப்பாரா என்பது தெரியவில்லை.





Maan karathey


நான் கவனித்த வரையில் A.R.முருகதாஸ் திரும்ப திரும்ப ஒரே தவறை தான் வம்படியாக செய்கிறார். அப்போதைய ட்ரெண்டில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களை நம்பி படத்தை ஆரம்பிக்கிறாரே தவிர, கதை - திரைக்கதை அம்சங்களை உதாசீனம் செய்கிறார். ஒரே விதிவிலக்கு, எங்கேயும் எப்போதும்... மீதி எல்லாம் வரிசையாக அடி வாங்கி கொண்டிருக்கிறது, படம் ரீலிஸான 2-3 நாட்களுக்கு தியேட்டர்கள் பரபரப்பாக இயங்கும். அதன்பின் படத்தின் லட்சனம் தெரிந்து உஷாராகி கல்தா கொடுத்து விடுவார்கள். சிலரே சிலர் மட்டும் அவரின் தயாரிப்பில் வெளி வந்த படங்களை க்ளாஸிக் என்று சிலாகித்து கொண்டிருப்பர், அதுவும் 10 நாட்களுக்கு மட்டுமே. இது ஆரம்பத்தில் 'பலராக' இருந்தது, இப்போது 'சிலராகி' விட்டது , இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் அருகி டோட்டலாக காலியாகி விடும்.

பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்-லைனகள் கேட்டே ஓகே செய்யப்படுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் "மான் கராத்தே" திரைப்படமும் கூட பிரமாதமான ஒன்-லைனை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு எப்படி திரைக்கதை என்னும் தீனி போடுவது என்று தெரியாமல் தவியாய் தவித்து இருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக கூட இருந்தது.

பொதுவாக ஹீரோயின்களை லூஸு போல் சித்தரிப்பது தான், தமிழ் சினிமாவின் பிரதான வழக்கம். இதில் ஒரு படி மேலே போய் ஹீரோயினின் அப்பாவையே லூஸாக சித்தரித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

+2 டொக்கு அடித்த பெண்ணின் அப்பனே, இப்போதெல்லாம் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள்.  அப்படியே கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள் பொண்ணு பார்க்க வந்தாலும் அவர்களிடமே salary slip, allotment order, bank balance, pass book எல்லாம் காட்ட சொல்லும் இந்த காலக்கட்டத்தில், ஹன்சிகாவின் அப்பாவான சாயாஜி ஷிண்டே, 10 திருக்குறளை சொல்லும் பையனுக்கே தன் பொண்ணை கொடுப்பேன் என்று எண்டர்டெயின்மெண்ட் மூவி டச் கொடுக்கிறார்... கொடுமை.

ஆங்காங்கே அனிருத், முருகதாஸ் மற்றும் சில நடன கலைஞர்கள் எல்லாம் எட்டி பார்க்கிறார்கள். இவர்கள் என்னா பெரிதாக புடுங்கி விட்டார்கள் என்று Guest appearance கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன், ஹன்சிகாவே Guest appearance கொடுத்தது போல் தான் இருந்தது.


Naan Sigappu Manidhan - Movie Review


- விஷாலுக்கு இந்த படத்திலும் கெட் அப் மாற்றப்படவில்லை. மாற்ற முடியவில்லை என்றே அவதானிக்கிறேன்.

- இனியா ஒரு படத்தில் கள்ளகாதல் செய்யும் பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திலும் அவரை கள்ளக்காதல் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
ப்ரியாமணி ஒரு படத்தில் 'ரேப்' சீனில் கமிட் ஆகி நடித்தார். அவருடைய பெர்பார்மன்ஸை அடுத்த படத்திலும் பார்த்து 'ரேப்' சீன் ஒன்றை வைத்தார்கள்.
லக்ஷ்மி மேனன் இந்த படத்தில் ஒரு ரேப் சீனில் நடித்திருக்கிறார்.அவர் மேல் கோலிவுட்டில் இருக்கும்  செண்ட்டிமெண்ட் சாம்பிராணிகளின் கண் படாமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

- ஜீ.வி.பிரகாஷுக்கு எங்கயோ நிச்சயம் எங்கயோ மச்சம் இருக்கிறது. எவ்வளவு மொக்கையாக பாடல்கள் போட்டு கொடுத்தாலும், இயக்குனர்கள் சந்தோஷமாக வாங்கி கொள்கிறார்கள். கருமம், அது ஹிட் ஆகி தொலைக்காமல் மரண பல்பு வாங்கினாலும், வேறு ஆள் கிடைக்காமல் அவரையே ஈ மொய்ப்பது போல் மொய்க்கின்றார்கள்.
பிண்ணனி இசையெல்லாம் கொடூரம். வசனம் பேசி கொண்டிருக்கும் போதெல்லாம் பிண்ணனி இசை வாசிக்கிறார்கள். ஒரு மயிரும் புரிய மாட்டேங்குது.

நீர் நல்லாயிரும் ஐயா...!


வேறு வழியில்லை. இந்த படத்தை கொண்டாடி தான் ஆக வேண்டும். ஆக்‌ஷன் படம் தான். ரிவென்ஜ் ஸ்டோரி தான். ஆனாலும் கொண்டாடி தான் ஆக வேண்டும். நீண்ட நெடிய திரை பயணத்தில், நம் தமிழ் திரையுலகம் 'ஆக்‌ஷன் ரிவென்ஜ்' என்ற இடத்தில் தான் டெண்ட் அடித்து அமர்ந்து விட்டது. அதை இந்த விமர்சகர்கள் எல்லாம் அடித்து கிளப்பியதில், ராங் ரூட் எடுத்து ஃபேண்டஸி, காமெடி, எண்டர்டெயின்மெண்ட் மூவி என திசை திரும்பி விட்டார்கள்.

திரும்பின இடமெல்லாம் பலத்த அடி, கலெக்‌ஷனும் செம்ம டல். என்ன செய்வதென்று தெரியாமல் சில ஸ்டெப்கள் பின்னால் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

மறுபடியும் கோலிவுட் முன்னால் அடி எடுத்து வைக்க வேண்டும் தான் என்றாலும், கிளம்பிய இடத்தை சரியாக கண்டுபிடித்து பின் வந்ததற்காக ஒரு Congrats  சொல்லலாம்.

Kottai Kovil

பெரும்பாலும் என்னுடைய பாட்டி எங்கேயாவது போக வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்கவே மாட்டார். போக வேண்டிய இடத்தை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக பேசுவார். அதை வைத்து நாமே புரிந்து கொண்டு கூட்டி சென்றால் சந்தோஷமாக வருவார். நேற்றைய தினம் கோட்டை கோவில் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழுந்ததால், இன்று பாட்டியை கோட்டை கோவில் கூட்டி சென்றேன்.

மூன்று விஷயங்களை கவனித்தேன்...

1) கோவில் ஐயரின் தீபாராதனை தட்டில் சில்லறைகளே அதிகம் விழுகின்றன. அடக்கத்துடன் ஏற்று கொள்கிறார். அவரிடம் suv xylo car இருக்கிறது.

2) பா.மா.க இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. கோவிலுக்குள் நுழைந்த பிரசார கும்பல், வரிசையில் நின்றிருந்த பக்தர்களை ஒதுங்கச் சொல்லி சாமி தரிசனம் பார்த்தனர். தரிசனம் பார்த்த கையோடு, கோவிலில் இருந்த எல்லோருக்கும் பிரசார நோட்டீஸ் கொடுத்து மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி கேட்டுக்கொண்டனர்.

3) ஆட்டோ ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தியிருந்த ஆட்டோக்காரர்கள், பேப்பர் படித்து கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் தான் இருந்தார்கள். முக்கால் கிலோமீட்டரில் இருக்கும் கோவிலுக்கு கூப்பிட்டால் 50 ரூபாய் கேட்டார்கள். போங்க டா கேனை கபோங்களா என்று டவுன் பஸ்ஸில் போய் வந்தோம். திரும்ப ஊருக்கு பஸ் ஏறும் போது, ஆட்டோ ஸ்டேண்டை எட்டிப் பார்த்தேன். எல்லாரும் எதற்கோ  சத்தமாக சிரித்து பேசி கொண்டிருந்தார்கள். ஒன்றரை மணி நேரமும் ஆட்டோக்கள் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தன.

Tenaliraman Movie review


படம் சூப்பர்.

விவாதிக்கவோ, விமர்சிக்கவோ பெரிதாக ஒன்றும் இல்லை. படத்தில் புரட்சி எல்லாம் வருகிறது. அது மட்டுமில்லாமல் எந்தெந்த மினிஸ்ட்ரி எப்படி செயல்பட வேண்டும் என்று சீரியஸாக அட்வைஸ்கள் எல்லாம் தூள் பறக்கிறது. எல்லாமே மேலோட்டமாக அள்ளி தெளித்து அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான படம் என்பதால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, யாரும் எதையும் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை.

படத்தில் வரும் தெனாலிராமன் கேரக்டரை விட, மன்னன் கதாபாத்திரம் தான் எதார்த்தமாகவும், போலித்தன்மை இல்லாமலும் இருக்கிறது. அதனாலேயே அந்த கதாபாத்திரம் மனதில் நிற்கும் அளவிற்கு வெகுவாக கவர்கிறது. இத்தனைக்கும் மன்னன் பேர் கூட கடைசி வரையில் சொல்லப்படவில்லை, அதை பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

நீதிக்கதைகள், திருக்குறள் கதைகள் எல்லாம் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கின்றன. அதன் வர்த்தக பாணியை அழகாக பின்பற்றி இதிலும் கூட, சில தெனாலிராமன் கதைகளை காட்சி படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் பாராட்டுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமா நாயகிகளை தான் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. வடிவேலு, விஜயகாந்த், டி.ராஜேந்திரன் போன்ற ஹீரோக்களை துரத்தி துரத்தி காதல் கொள்கிறார்கள். விட்டால் கற்பழித்தே விடும் அளவிற்கு ஓவர் ரொமான்ஸ் செய்து ஹீரோக்களை மகிழ்விக்கிறார்கள். ஆனால் ஆர்யா, சித்தார்த், ஜீவா போன்ற அழகு ஹீரோக்களை மட்டும் அலையோ அலை என்று அலைய வைக்கின்றனர். நாட்டில் அழகாக பிறப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

படத்தின் செட், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு என்று அனைத்து தரப்பினரும் பழங்காலத்து மன்னர் வாழ்க்கையை காட்சிப்படுத்த இயன்ற வரை முயன்று இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக இது போதாது. இவ்வளவு டெக்னாலஜிகளையும், டெக்னீஷன்களையும் வைத்திருக்கும் கோலிவுட், இன்னமும் நம்பும் படியான மன்னர் காலத்து வாழ்க்கையை காட்சிப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. செலவு அதிகம் பிடிக்கிறது. அதை நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் வேண்டும் என்பதே என் கருத்து. ஒருவர் விடாமல் எல்லோரும் புத்தம் புது ஆடைகளை அணிந்து வலம் வருவதும், அரண்மனை முழுதும் டெம்ப்ளேட்டாக சுத்தமாக இருப்பதும் ரொம்பவே உறுத்துகிறது.

D.இமான் என் ஹீரோ, இப்போதைய ட்ரெண்டில் இமான் தான் டாப் என்பது என் கருத்து. 'ஏலே ஏலே மருது' பாட்டெல்லாம் என் மனதிற்கு அத்தனை நெருக்கமானவை. இந்த படத்தின் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றி விட்டது தான் என்றாலும், பழங்காலத்து கதை என்பதால் நிறைய கட்டுப்பாடுகள் கழுத்தை நெரித்திருக்கும் என அவதானிக்கிலாம். ஒவ்வொரு முறை சரணம் repeat ஆகும் போதும், தபேலாவின் தாளத்தில் ஏதேனும் வித்தியாசம் காட்டும் பழங்கால டெக்னிக்கை இதில் பயன்படுத்தி இருப்பதை ரசிக்க முடிகிறது. அது மட்டுமே ரசிக்கும் வகையில் இருப்பது தான் சோகம்.

கல்லா கட்டுமா கட்டாதா என்ற பீதியிலே ஸ்க்ரிப்ட் அமைத்திருப்பது நன்கு புரிகிறது. இத்தனைக்கும் இம்சை அரசன் படத்தை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் ஸ்க்ரிப்டில் இத்தனை ஓட்டைகள் என புரியவில்லை. மன்னர் 10 நாட்கள் மக்களோடு மக்களாக வாழ்வதை காட்டுகிறார்கள். நாள் 1 என சொல்லி சில காட்சிகளை காட்டுகிறார்கள். அதன் பின் அந்த கண்ட்டினுயேஷனையே காணோம். நாள் 5 க்கு தாவி விடுகிறார்கள். இதற்கு எதற்கு கஷ்டப்பட்டு எத்தனையாவது நாள் என்று காட்டவேண்டும். யார் கேட்டார்கள் ?

மன்னருக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய அரசவையிலும், நாட்டிலும் என்ன பிரச்சினை என்று தெரிந்த பின்னரும், ஏன் மன்னர் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்? 10 நாள் கணக்கு முடிய வேண்டும் என்றா? உண்ணாவிரதத்தில் ஒருவரது உயிர் போகும் நிலையிலும் கூட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் ரகசியம் புரியவில்லை.
இந்த அளவு ஓட்டை ஒடசலான ஸ்க்ரிப்ட்டையும் தாங்கி பிடிப்பதும், ரசிக்க வைப்பதும் One & only வடிவேலு மட்டுமே.

கோலிவுட்டின் பல பிரதான character artistகளை சின்னதும் பெரிதுமாக ஒரு ரவுண்டு வர வைத்திருக்கிறார்கள். இது நிச்சயம், வடிவேலுவின் அக்கறையாக தான் இருக்கும்.

ஆரூர்தாஸ் வசங்களில் வடிவேலு ஆதிக்கம் செய்யும் இடங்கள் உண்மையிலே வெறி கொண்டு சிரிப்பை வரவைப்பவை. "உன் அம்மாக்களில் 3 பேருக்கு இடுப்பு வலியாம், போய் பார்த்து விட்டு வருகிறேன்" என்று அந்தபுரத்திற்கு கிளம்பும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

தெனாலிராமன் போன்ற படங்களை நிச்சயம் வரவேற்கலாம் என்று தான் நினைக்கிறேன். பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றிய படமெடுத்தால் பார்க்க ஜாலியாக தான் இருக்கிறது. வெவ்வேறு பரிணாமங்களை பார்க்க சுவாரஸ்யமாகவும் இருக்கும். சமகால அரசியலை மறைமுகமாக தாக்கி டார்ச்சர் செய்யாமல் இருந்தால் சரி.

ஆன்னா ஊன்னா புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்றால் கேட்பதற்கே போரடிக்கிறது.