Saturday 30 November 2013

நவீன சரஸ்வதி சபதம்







இந்த படத்தை பற்றியெல்லாம், ஒரு பதிவு எழுதுவதையே கேவலமாக நினைக்கிறேன். இரண்டாம் உலகம், ராஜா ராணி போன்ற அரைவேக்காட்டு தனமான படங்களை க்ளாஸிக் என நினைப்போருக்கு, இந்த படம் பிடிக்கலாம்

இந்திய தேசம் முழுவதும் தேடியதில் நாலே நாலு மொடா குடிகாரர்கள், சிவனுக்கு கிடைக்கிறார்கள். அவர்களிடம் திருவிளையாடல் செய்து, அவர்களின் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க செய்வது தான், நவீன சரஸ்வதி சபதம். காமெடி படம் என்ற பேனரை தாங்கி வந்த இந்த படம், திரையரங்கில் ஒருவரை கூட சிரிக்க வைக்காதது கேவலத்திலும் கேவலம். கதை, திரைக்கதை, இசை, பிண்ணனி இசை, நடிப்பு என்று எங்கு புகுந்தாலும் நொட்டை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, என்னை கேட்டால் 2013-ல் வெளி வந்த படங்களில் விமர்சனம் எழுத கூட தகுதியில்லாத படம் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

படத்தை தவிர்த்து வேறு சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன். குடிப்பழக்கத்தை திருத்துகிறேன் என்ற பேர்வழியில் ஆளாளுக்கு எடுக்கும் டாக்குமென்ட்ரி படங்கள், சீரியஸ் படங்கள், காமெடி படங்கள், குறும்படங்கள் என எல்லாமும் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்து கொண்டிருக்கிறன. இப்படி தொடர்ந்து தோல்விகளையே தழுவி கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தை எதிர்க்கும் தகுதியான திரைப்படங்கள் கூட கேலிக்கூத்தாக்கப் படலாம் அல்லது மொண்ணையாக்க படலாம். இவர்களின் அடிப்படை நோக்கம் வணிகம் தான் என்றாலும், ஆர்வக்கோளாறு காரணமாக தகுதிக்கு மீறி மெஸெஜ் எல்லாம் சொல்கிறார்கள்.

கொஞ்ச வருடங்கள் முன்பு, ஏதோ ஒரு நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் விட்டொழிப்பதற்காக, அந்நாட்டு அரசு சார்பாக ஒரு பயங்கரமான விளம்பர பலகை வைக்கப்பட்டது, அதில் ஓர் தூண்டில் முள், புகை பிடிப்பவரின் வாயை மாட்டி இழுப்பது போல் பார்த்தாலே அருவருப்பும், அதிர்ச்சியும் உண்டாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து பெருமளவு மக்கள் தங்களது சிகரெட் பழக்கத்தை விட்டொழித்தனர் என்று, அதன் அருகாமை நாடுகளும் கூட அதனை பின்பற்றினர். இது எப்போவோ படித்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில் வெளி வரும் குடிக்கெதிரான படங்களை எல்லாம் நான் எவ்வள்வு நாட்கள் நினைவில் வைத்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை.

மதுபான கடை படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதே ஒழிய வெகுஜன மக்களின் கவனிப்பை பெறவில்லை, அங்கேயே படம் தோற்றுவிட்டது. இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் கதையம்சமும், நகைச்சுவையும் பேசப்பட்டளவு கூட அதன் குடிக்கெதிரான சங்கதிகள் பேசப்படவில்லை. திரையரங்குகளில் திரையடப்பட்டும் கேன்சர் தொடர்பான காட்சிகள் எல்லாம் எப்போதோ கேலிக்குரிய ஒன்றாக மாறி போய் விட்டது. புகையிலை பழக்கத்தால் வரும் பாதிப்புகளை நேரடியாக மக்களிடம் எடுத்து சொல்லி, அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாலும், அதில் காட்டப்படும் நோயாளிகளோடு மக்களால் ஒன்ற முடியவில்லை. பெயருக்கு என ஒரு வீடியோவை, மத்திய அரசு தயாரித்து வெளியிட்டால், அது இப்படி தான் இருக்கும்

குடி மட்டுமே நம் தேசத்தின் பிரதான பிரச்சனை போலவும், குடிப்பழக்கம் மக்களை விட்டு ஒழிந்தால் தேசமே சொர்க்க பூமி ஆகிவிடும் என்பது போல் இங்கு ஒரு போலி பிம்பம் ஒழுக்கச்சீலர்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. கல்விமுறை, சாயப்பட்டறைகள், மலினமான அரசியல் கொள்கைகள், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, விவசாயம் ஊக்குவிப்பு இன்மை, வேலையில்லா திண்டாட்டம், தப்பும் தவறுமான சிஸ்டங்களுடன் செயல்புரியும் அரசு அலுவலகங்கள், அடிப்படை ஆரோக்யம் குறித்த அக்கறையின்மை என எல்லா பக்கமும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமூகம், குடிப்பழக்கத்தில் மட்டுமே நோய் வாய்ப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்ட ஒழுக்கச்சீலர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த தகுதியும் இல்லை. குடிப்பழக்கத்தை திருத்துவதை விட இங்கு பற்றி எறியும் பிரச்சனை எத்தனையோ இருக்கின்றது.

சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 100 வயது வரை கூட மக்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கு தரமான மதுவும், புகையிலையும் கிடைக்கும் வகையிலாவது அந்நாட்டு அரசு அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இங்கு அதற்கான கட்டமைப்புகளும் இல்லை, எதிர்த்து கேட்க யாருக்கும் துப்பும் இல்லை.

சொல்ல மறந்து விட்டேனே, படம் ஆரம்பிப்பதற்கு முன், தமிழக அரசின் சாதனைகளை விவரித்து 15 நிமிடம் வீடியோ ஒன்று ஓடியதுஅந்த கொடுமையையும் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தேன்.

இரண்டாம் உலகம் – An Exhibition









சமீபத்தில் வந்த திரைப்படங்களில், இவ்வளவு அபார உழைப்பை தாங்கி வந்த திரைப்படம் இதுவாக தான் இருக்கும், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால், வெறும் அழகு மட்டும் நம்மை திருப்திப்படுத்தாது என்பதற்கு, இரண்டாம் உலகம் ஓர் உதாரணம்.

செல்வ ராகவனை டைரக்ஷனில் தான் ஆள் கெட்டியே தவிர, ஸ்க்ரிப்ட்டில் ரொம்பவே தள்ளாடுகிறார், இருந்தாலும் அவரை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தவன் லவ்வரை உஷார் செய்வதையே கதைக்களமாக வைத்து, தான் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், ஒவ்வொரு வெரைட்டி காட்டுகிறார். படத்தில் ஸ்க்ரிப்ட் தரம் என்ன என்பதனை ஆராய்ந்தால், எந்த அளவும் இறங்கி அடிக்கலாம்

படத்தில் இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா

ஆர்யா சில காட்சிகளில் ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறார், ஆர்யா அழகாக இருக்கிறார் என்பதை தவிர, அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவென்றே தெளிவாக சொல்லப்படவில்லை என நினைக்கிறேன். முதல் உலகத்தில் வரும் ஆர்யா, ஒரு தீவிர சமூக சேவகனாக காண்பிக்கப்படுகிறார், ஆனால் எல்லாம் ஒரு 5 நிமிடத்திற்கே, அதன் பிறகு சமூக சேவை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. காதல் வந்ததும் காணாமல் போய் விடுகிறது. அப்படியென்றால் இந்த படத்தின் வில்லன் யார் என்று பார்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகத்தில் வரும் ஆர்யா, வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டும், அனுஷ்காவும் ரூட் விட்டு கொண்டும் திரிகிறார், கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, திடீரென்று ஒரு மாபெரும் வீரனாக உருவெடுத்து விடுகிறார். அது எப்படி என தெரியவில்லைஅவ்வப்போது, சில பல காமெடி காட்சிகளை கூட முயற்சி செய்து பார்த்திருக்கின்றனர், ம்ஹூம்ம்ம்…. 

முதல் பாதியில், மருத்துவர் அனுஷ்கா இறந்த பின்பு, நாய் ஒன்று மதுபாலக்கிருஷ்ணனை அதாவது ஆர்யாவை அனுஷ்கா இறந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது, அங்கே சொட்டி கிடக்கும் ரத்தத்தில் இருந்து செடி ஒன்று முளைக்கிறது. அது எதற்கான குறியீடு என்று இப்போது வரைக்கும் எனக்கு விளங்கவில்லை. அதன்பின் மதுவின் அப்பா இறந்து விட்டதாக செய்தி வருகிறது, ஆனால் அவரின் ஈமச்சடங்கிற்கு போனாரா என்று தெரியவில்லை, இறந்து போன அனுஷ்காவை, சுடுகாட்டை விட்டுவிட்டு கோவா முழுதும் தேடி அலைகிறார்.

படத்தில் வரும் இரண்டாம் உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை தவிர எல்லாரும் வெளிநாட்டவர்களாக இருக்கின்றனர், அதுவும் மொத்த உலகமும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்புலமாக கொண்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.
  
இப்படி ஸ்க்ரிப்ட்டில் எந்த குறுக்கு சந்தில் புகுந்தாலும், நமக்கு அங்கு ஒரு காமெடியான லாஜிக் ஓட்டை காத்து கொண்டிருக்கிறது. படம் மொத்தமும் மொக்கையாக போகிறதா, சாஃப்ட்டாக போகிறதா என்று கண்டுபிடிக்கவே தனியாக மூளையை போட்டு கசக்க வேண்டியதாய் இருக்கிறது. ஆர்யாவின் சமூக சேவை என்னவானது, இரண்டாம் உலகத்தின் ஆணாதிக்கம் முடிவிற்கு வந்ததா, அரசன் தூக்கியெறியப்பட்டானா, இரண்டாம் உலகத்தின் எதிரிகள் அழிக்கப்பட்டனராஎதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் கல்யாணம் செய்து கொண்டு கஜாகஜா  செய்தார்தார்களா, இல்லையா என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அது தான் கதை,,,

பல பரிமாணங்களை பார்த்து விட்ட தமிழ் சினிமா, இந்த படத்தை பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு நமக்கு தந்திருப்பது ஏமாற்றமே என்றாலும்படத்தின் சி.ஜி காட்சிகள், படத்தின் செட், கேமரா, காட்சி நேர்த்தி என நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை, அதிலு,ம் சில பாடல்கள் நம் பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படத்தின் பிண்ணனி இசை மிகவும் ரம்மியமாக இருந்தது. படம் முடித்து வெளியே வந்ததன் பின்னரும், அதன் பிண்ணனி இசை வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இவ்வளவு கடின உழைப்பை டெக்னிக்கல் டீம் கொடுத்தும், ஸ்க்ரிப்ட் தள்ளாடுவதால் படம்பல்ப்வாங்குவது, சோகத்திலும் சோகம்!

இந்த பதிவை அனுஷ்காவை வைத்து முடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

இப்போதிருக்கும் கதாநாயகிகளில் அனுஷ்காவே முன்னிலை வகிக்கிறார் என்றாலும், தமிழில் இது வரை அவருக்கு ஏற்ற பாத்திரத்தை எந்த தமிழ் சினிமாவும் தராமல் இருந்தது. ஆனால், இரண்டாம் உலகம் நிச்சயம் அவருக்கு ஏற்ற மாஸான ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது. வெகு நிச்சயமாக, அனுஷ்கா மட்டுமே, இத்தனை நீளமான தள்ளாட்டமான படத்தை பார்க்க வைக்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறார், படத்தின் காஸ்ட்யூம், லொக்கேஷன், கேமரா, ஸ்டன்ட் என ஒவ்வொருவரும் மாய்ந்து மாய்ந்து அனுஷ்காவிற்காகவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அத்தனைக்கும் அவர் தகுதியானவர் என்பதனைஇரண்டாம் உலகம்மூலம் நிரூபித்தியிருக்கிறார்.

லவ் யூ அனுஷ்கா….!

Sunday 10 November 2013

Pandiya Nadu - Movie review






பாண்டிய நாடு படம் பார்த்தேன், படத்தில் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்றாலும், ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியாவது கிடைத்தது என்றால் அதற்கு காரணமாக மூன்று பேரை சொல்லலாம் சுசீந்திரன், பாரதிராஜா, D. இமான்.

மொத்த படத்திற்கும் ஓர் அசத்தலான கலர் கொடுத்ததே பிண்ணனி இசையாக தான் இருக்க கூடும். சமீபமாக வந்த படங்களில் எதிர்நீச்சல், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு அடுத்ததாக இந்த படம் பிண்ணனி இசையில் ஓரளவு கோலிவுட் மானத்தை காப்பாற்றுகிறது என்றே சொல்லலாம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஓர் காட்சி வரும், சிவகார்த்திகேயன் நீளமாக ஒரு வசனத்தை பேசி விட்டு பரோட்டா சூரியை பார்த்து “என்ன டா பார்க்குற நீயும் சொல் டா” என சொல்வார், “இதையெல்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்க”ன்னு அப்பாவியாக பம்மி விடுவார். ஆனால் இந்த படத்தில் அது போல் பம்மாமல், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்து பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார்.

இப்போது வரும் படங்களில் கலை இயக்குநர்களின் பணி தான் என்ன என்பதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன், படத்திற்கு இரண்டு பாடல்களுக்கு மட்டுமே செட்டு போடுகின்றனர் என நினைக்கிறேன், அதிலும் எந்த ஒரு இன்னோவோஷ்னையும் காணோம். ப்ரோட்யூசர்கள் தான் பேருக்கு செட்டு போட்டா போதும் தம்பி, என்று சொல்வார்கள் என யூகிக்கிறேன்.

லக்‌ஷ்மி மேனன், ஸ்கூல் படிக்கும் பெண் என்று சொன்னால் உண்மையிலே நம்ப முடியவில்லை, இப்போதே ஆன்ட்டி லுக் வந்து விட்டது. இன்னும் மூன்று வருடங்களில், விஷாலுக்கு அண்ணியாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொடர்ந்து வரும் தமிழ் படங்கள் மக்களை பயமுறுத்தும் வகையிலும், ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கும் வகையிலே வெளி வருவது தமிழகத்தின் சாபக்கேடு என்றே நினைக்கிறேன். நம் கண் முன் நிகழும் அநியாயங்களையும், தொழில் ரீதியில் நிகழும் அநியாயங்களும் கண்டு கொள்ளாமல் போனால் நாம் பிழைத்தோம், இல்லையென்றால் வீட்டில் ஒரு உயிர் அல்ப்பாயுசில் போகும் என்றே தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிய பெரிய பெரிய கட்டிடங்களை டிராஃபிக் ராமசாமி இழுத்து மூடி காலி செய்யவில்லையா? இப்போது மீண்டும் அது திறக்கப்பட்டு விட்டது என்பது வேறு விஷயம், ஒரு சாதாரண குடிமகனால் கூட பெரிய விஷயங்கள் சாத்தியப்படும் என்பதற்கு நம் நிகழ் காலத்திலே பல உதாரணங்கள் இருக்கின்றன. என்ன.. எல்லாமே இழுத்தடிக்கும், அவ்வளவு தானே தவிர, அடுத்த நிமிஷமே வீட்டின் முன் ஸ்கார்ப்பியோ கார் நிற்கும் என்பதெல்லாம் அதீதம்.

என்னுடைய அம்மா அறநிலைய துறையில் சேர்ந்த நாளில் இருந்து, அரசியல் செல்வாக்குள்ள, பணபலம் உள்ள பலரிடமிருந்து அரசாங்கத்திற்குரிய நிலங்களை மீட்டு எடுத்து இருக்கின்றார், தோராயமாக இது வரை 20-30 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை மீட்டு எடுத்து இருக்கின்றார். இதற்கு காரணம் அம்மா மட்டுமே என்று சொல்லி விட முடியாது, ஆரம்ப புள்ளியாக அமைந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அறநிலைய துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகிய மூன்று துறைகளுமே அவரவர் கடமைகளை சரிவர செய்து, என் அம்மாவிற்கு ஆதரவாக செயல்பட்டன. கலெக்டரும், மினிஸ்டர்களும் கொடுக்கும் குறுக்கீடுகளை கூட தூக்கி அடித்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்…

இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், எப்போதுமே நல்லது செய்ய இறங்குவோருக்கு ஆதரவாக பல கரங்கள் உதவுகின்றன, அதிலும் முக்கியமாக அரசாங்க அலுவலகங்களில்… இப்போதிருக்கும் ஓட்டை ஒடைசலான சட்ட அமைப்புகளிலே கூட பலர், தீமைக்கு எதிராக சாதித்து கொண்டு தான் இருக்கின்றனர், தவிர, அவர்கள் இப்போதும் ஓர் எடுத்துக்காட்டாக நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர், மாறாக செத்து விடவில்லை.


ஆரம்பம்





ஆரம்பம்ஒரு தியேட்டர் ரெஸ்பான்ஸ் விமர்சனம் ;-

ஒரு சந்தோஷமான செய்தி என்னான்னா, இந்த படத்துல முகேஷ் இல்லை. மத்தப்படி எல்லா டார்ச்சர்களும் அம்சமா இருக்கு

படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இருந்தே, அஜித்தின் ரசிக சிகாமணிக்கள், ஓவர் ஆர்வமா இருந்தாங்கஎல்லா க்ரூப்பும் சும்மா சும்மா கத்திக்கிட்டு இருந்துச்சு, எனக்கு முன்னாடி இருந்த க்ரூப்ல ஒரு பையன் பொறுப்பா பழைய பேப்பரையெல்லாம் எங்கிருந்தோ பிடிச்சிட்டு வந்து சின்ன சின்ன துண்டா கிழிச்சு, அவன் க்ரூப் ஆளுங்களுக்கெல்லாம் சப்ளை பண்ணிட்டு இருந்தான். ஏதோ கோயில் பிரசாதம் தர மாதிரி எனக்கும் கூட கொஞ்சம் கொடுத்தான், நானும் ஏதோ மரியாதைக்காக வாங்கி வெச்சிக்கிட்டேன்.

ஆரம்பம்னு சென்சார்டு சர்ட்டிபிக்கேட்டு தான் காட்டினாங்க, அதுக்கே முன்னாடி இருந்த ரசிக மணிகள், ஆர்வக்கோளாறுல இருக்கிற பேப்பரையெல்லாம் பறக்க விட்டுட்டானுங்க, அப்பறம் அஜித் வர்றதுக்குள்ள கீழே இருக்கிற பேப்பரையெல்லாம் பொறுக்கி எடுத்து, மறுபடியும் பறக்க விட்டுட்டாங்கஅடுத்து பொசுக்குன்னு அஜித்துக்கு ஒரு பாட்டு வேற வந்துட்டது, பாவம் அந்த சிறிய அவகாசத்துக்குள்ள பயபுள்ளைகளால முன்னாடி இருக்கிற பேப்பரையெல்லாம் பொறுக்கி எடுக்க முடியலை போலபின்னாடி திரும்பி என்கிட்ட இருந்த பேப்பரையெல்லாம் வாங்கி கிட்டானுங்க, நானும் கொடுத்துட்டேன்.. அதையும் ஜோரா வாங்கி பறக்க விட்டுட்டாங்க

அதுக்கப்பறம் அவங்களுக்கு பேப்பர்  தேவைப்படவேயில்லை


ஆரம்பம்ஒரு இறங்கி அடி விமர்சனம் ;-

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் அறிவிச்ச போதே, ‘ரம்பம்னு கமெண்ட்டை போட்டு, நம்ம ஃபேஸ்புக் நண்பர்கள் களத்துல குதிச்சிட்டாங்க. அதை பார்த்துட்டாவது, படத்தை கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம்.

ஒரு காலத்துல தமிழ் சினிமா எடுக்கணும்னா, நேரா பர்மா பஜார் போய் சல்லிசா இருக்கிற ஹாலிவுட் படங்களையெல்லாம் அள்ளி போட்டுட்டு வந்து கதை எழுதுவாங்க, இப்ப கொஞ்சம் ட்ரெண்டை மாத்தி மூர் மார்க்கெட் போய், காமிக்ஸ் புக்ஸையெல்லாம் அள்ளி போட்டுட்டு வந்து கதை எழுதறாங்க போல இருக்கு..
          
எடுத்தவுடனே நம்ம தல அஜித், மூனு பில்டிங்குக்கு டைம் பாம் வெச்சிட்டு, அதை நல்ல பிள்ளையா போலிஸ்க்கும் சொல்லிடறாருபோலிஸ், பாம் ஸ்க்வார்டுலாம் வந்தும் கூட ஒன்னும் பருப்பு வேகலைதல வெச்ச டைம் பாம் ஆச்சேவெடிக்காம இருக்குமாமிஸ் ஆகாம வெடிக்குதுஅங்க ஆரம்பிக்குது தீபாவளி

இந்த படத்துல ஆர்யா ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் கம் ப்ரோக்கமர் , அவரோட படிச்சவர் தான் நம்ம நயன்தாராஅஜித்தும், நயன்தாராவும் ஒரு ஆபரேஷனுக்காக ப்ளான் பண்ணி, நம்ம ஆர்யாவை கடத்திட்டு வந்துடறாங்க.. இந்த இடத்துல ஆர்யாவுக்கு ஒரு முன்கதை, நம்ம ஆர்யா காலேஜ் படிக்கும் போது ரொம்ப குண்டா இருந்தவரு, அவரு டாப்ஸியை லவ்வாங்கீஸ் பண்றாரு, ஆர்யா பார்க்கறதுக்கு நல்லா, அழகா, பப்ளியா இருக்கிறதால டாப்ஸி, கண்டுக்காம கண்டுக்காம போய்டுது, அவளுக்காக கஷ்டப்பட்டு உடம்பை குறைச்சிட்டு வந்து டாப்ஸி லவ்வை ஓகே பண்றாரு…. நிற்க! படத்தில் இந்த முன்கதை ஓர் காமெடி போர்ஷன்.. மறக்காம சிரிச்சிடுங்கநாங்கெல்லாம் சிரிக்க மறந்தட்டோம்அப்பறம் கடத்திட்டு வந்த ஆர்யாவை சில சேனல்ஸை ஹேக் பண்ண சொல்றாரு.. அவரும் அந்த ஹேக்கிங்கை சர்வ சாதாரணமா பண்ணிட்டு, வீட்டுக்கு போகனும், ஆத்தா வையும்ங்கறாரு… ‘எங்க போற, இப்ப தானே கதையே ஆரம்பம்னு சொல்லி நம்மளை டெரரா பார்க்குறாருஇந்த இடத்துல எல்லாரும் உச்சஸ்துதியில கத்திடுங்கஏன்னா நாங்க மறந்துட்டோம்

இதுக்கு நடுவுல நம்ம டாப்ஸி, மீடியா தான் டா என் ஏம்பிஷன்னு, மீடியால குதிச்சிடறாங்கசமையல் ப்ரோக்ராம், நியூஸ் ரிப்போர்ட்டிங், நியூஸ் ரீடிங், பாட்டு போடற நிகழ்ச்சின்னு எல்லா நிகழ்ச்சியையும், பாவம் நம்ம டாப்ஸியே ஒரே ஆளா பார்த்துக்குதுஅந்த சேனலையும் டாப்ஸி மட்டுமே பார்க்குதுன்னு, தனியா நான் சொல்ல தேவையில்லை

மும்பை ஜாயின்ட் கமிஷ்னரும், ஹோம் மினிஸ்டரும் மீடியா முன்னாடி நல்லவன் மாதிரி காட்டிட்டு, அரெஸ்ட் பண்ண தீவிரவாதியை ரிலீஸ் பண்ண விலை பேசறாங்கபட்டத்துயானை படத்துல, சந்தானம் ஒருத்தனை பார்த்து, “”யார் றா இவன், காட்ஸில்லாவை கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கான்?”னு சொல்லி ஒருத்தரை கலாய்ப்பாரே, அவர் தான் இந்த படத்துல வர்ற அந்த தீவிரவாதி

நம்ம தல, ஹோம் மினிஸ்டரோட ஆடிட்டரை டார்கெட் வெச்சு, ஆர்யாவை கூட கூட்டிட்டு போய், அவர் கிட்ட இருக்கிற ஹார்ட் டிஸ்க்லாம் எடுத்துக்கிட்டு அவரை அங்கயேடுமீல்பண்ணிடறாங்கஅவரை கொன்னுட்டதால ஆர்யாவுக்கு பயங்கர கோபம்அவரே போலிஸ்க்கு இன்பரமேஷன் கொடுத்து, அவங்க இடத்துக்கு வர வெச்சி, தலையை சிக்க வெச்சுடறாருபில்டிங்கை சுத்தி போலிஸ் வந்துடுது, அஜித்தை அங்கயே அரெஸ்ட் பண்ணாம, கொஞ்ச நேரம் கார் ஸ்டன்ட் காட்சியெல்லாம் காட்டி, அப்பறம் பொறுமையா அரஸ்ட் பண்றாங்கநம்ம நயன்தாரா எப்படியோ, ஷேர் ஆட்டோ பிடிச்சு எங்கயோ எஸ்கேப் ஆகிடறாங்க… (இந்த இடத்தை கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க, பின்னால தேவைப்படும்) அஜித்தை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது, ஆர்யா அஜித்தை பார்த்துஉன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் இது தான் டா முடிவுன்னு பஞ்ச் அடிக்கிறாரு.. அதுக்கு நம்ம தல, ‘இது முடிவில்லஇனிமே தான் ஆரம்பம்னு ரிட்டர்ன் பஞ்ச் அடிக்கிறாருவிசில் அடிக்கலாமா, வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, இன்டர்வெல் விட்டுடறாங்கநீங்க யோசிக்காம விசில் அடிச்சிடுங்க

அதுக்கப்பறம், எங்கிருந்தோ நயன்தாரா ஆர்யாவை கண்டுபிடிச்சு வந்து, “இப்படி அநியாயமா அவரை மாட்ட விட்டுட்டியேஅவரை பத்தி உனக்கு என்ன டா தெரியும், அவருக்கு நடந்த கொடுமை என்ன, அநியாயம் என்ன, துரோகம் என்னன்னுலாம் உங்களுக்கு தெரியாது…” என சொல்லி ஒரு ஃப்ளாஷ் பேக்கை ஓப்பன் செய்கிறார்

இந்த இடத்துல நாம ஃப்ளாஷ் பேக்கை உத்து கவனிக்கனும், மறுபடியும் படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப்ல வந்த அஜித்துக்கான பில்ட் அப்லாம் வருது, அவரோட ஃப்ரெண்டு ஒருத்தரு பேரு சஞ்சய், ரெண்டு பேரும் சேர்ந்து அந்த காட்ஸில்லா கலர் ஜெராக்ஸ் தீவிரவாதியை பிடிச்சி ஜெயில்ல போடறாங்க.. அப்பறம் கொஞ்சம் காமெடி சீன், அதுல பாருங்க, அந்த சஞ்சய்யோட தங்கச்சி பாப்பா தான் நம்ம நயன்தாரா, அதனால தான் அவங்களுக்கு முழு கதையும் தெரிஞ்சிருக்கு, அப்பறம் மறுபடியும் தலைக்கு ஒரு இன்ட்ரோ சாங்கை போட்டு, அவங்க ரசிக சிகாக்களையெல்லாம் கவனிச்சிட்டு, திரும்ப கதைக்கு வர்றாங்கஅஜித்தும் அவரோட ஃப்ரெண்டுலாம் வேலை செய்யற டிபார்ட்மென்ட்ல, ஹோம் மினிஸ்டர் தலைமைல எல்லார்க்கும், ஒரு ஹெல்மெட்டும், ஒரு புல்லர் ப்ரூஃப் ஜாக்கெட்டும் தர்றாங்க.. அதை 2 செகன்ட் கட்டம் கட்டி காட்டும் போதே, நமக்கு அதுல ஏதோ வில்லங்கம் இருக்கிறது புரிஞ்சிடுது

அப்பனு பார்த்து, அஜித் அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற தீவிரவாதியை ரிலீஸ் பண்ண சொல்லி, அவங்களோட கொல்லீக்ஸ்லாம், சில வெளிநாட்டுக்காரங்களை பிடிச்சி வெச்சிக்கிட்டு கொன்னுருவேன்னு ப்ளாக்மெயில் பண்றாங்க.. அந்த ஆபரேசன்ல இறங்கற நம்ம பசங்கள்ல, சஞ்சய் மட்டும் புல்லட் ப்ரூஃப் இருக்கிற தைரியத்துல, சண்டையில ஓவர் பெர்மான்ஸ் காட்டிடறாரு, குண்டு அடி பட்டு செத்துடறாரு, என்ன டான்னு பார்த்தா, கொடுத்த புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் ஓர் டம்மி ஜாக்கெட்., நம்ம அரசியல்வாதிங்க பழக்கதோஷத்துல அதுலயும் ஊழல் பண்ணி தொலைச்சிருக்காங்கஇது தெரிஞ்சு நம்ம அஜித், ஃபேஸ்புக் போராளி கணக்கா பொங்குறாருஜாயின்ட் கமிஷ்னர் கிட்ட போறாரு, அவரு டபாய்க்க பார்க்கறாரு, இவரு கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு, நேரா மினிஸ்டர் கிட்ட போறாரு, அவரும்அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு அஜித்தை டபாய்க்கவே, நம்ம அஜித் எல்லாரையும் பழிவாங்க முடிவு பண்றாரு…,

அவரை அங்கயே ஆஃப் பண்ணனும்ங்கறதுக்காக ஒரு இத்து போன கேஸ்ல அவரை உள்ள தள்ளி, சாவடி அடிக்கிறாங்க, அடிச்சிட்டு அங்கன வெச்சே தலையை கொன்னு தொலைப்பாங்கன்னு பார்த்தா, வழக்கம் போல நம்மளை ஏமாத்திடறாங்கஎங்கயோ ஒரு பெரிய பள்ளத்தாக்கா பார்த்து, நிற்க வெச்சு டுமீல்னு ஒரே ஒரு சுடு மட்டும் சுடறாரு, நம்ம வில்லன் சார். கொல்றது தான் கொல்றாரு, சும்மா தீபாவளி துப்பாக்கி கணக்கா சராமரியா போட்டு தள்ள வேண்டியது தானே, பாவம் வீட்ல ரொம்ப கஷ்டம் போல இருக்குன்னு நாம திங்கிங்க்ல இருக்கும் போது, தலை தண்ணில விழுந்ததுக்கு அப்பறமா தண்ணியை பார்த்து டுமீல் டுமீல்னு சுட்டுனு கிடக்குது அந்த அறியா பிள்ளை, அட விளங்காம போனவனே, இதை முதல்ல செஞ்சு தொலைக்கிறதுக்கு என்னா டான்னு, நம்ம மனசுல ஒரு கேள்வி வருது, இருந்தாலும் ஃப்ளாஷ்பேக்னாலே இந்த கொடுமையெல்லாம் கேட்டு தான் தொலைய வேண்டியிருக்குன்னு நாம மூடிட்டு இருக்குற கேப்ல நம்ம வில்லனுங்க சஞ்சய் குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரையும் விஷம் கொடுத்து கொன்னுடறாங்க, அடிப்படையில இது ரொம்ப சோகமான காட்சி தான்னாலும், நம்ம கை பாப்கார்ன் பேக்கட்டுக்கு போறதை தவிர்க்க முடியலை, அதுல பாருங்க நம்ம நயன்தாரா மட்டும் எஸ் ஆகிடறாங்க (நோட் பண்ணதை ரெஃபர் பண்ணிக்கோங்க பாஸ்…) ,  இப்ப பழிவாங்க போதுமான ஸ்டோரி கிடைச்சிடுச்சுங்கறதுக்காக தான் ஆர்யாவை கடத்துனதுன்னு ஒரு லாங் ஸ்டோரியை, நம்ம நயன் சொல்லி முடிக்கிறாங்கநமக்கெல்லாம் ஒரு யுகமே போன மாதிரி இருக்கு

இருந்தாலும், சொந்த அண்ணன் செத்த சோக கதையை சொல்லும் போது, காமெடி சீன், பாட்டு சீன், பில்ட் அப் சீன் முதற்கொண்டு விளக்கி சொல்றதுலாம் ஓவர்நம்ம மிஷ்கின் பாலிஸியை ஃபாலோ பண்ணி ஒரு காக்கா நரி கதை சொல்லியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்படம் பூரா சாப்பிட வெச்சிருந்த பாப்கார்ன் பேக்கட் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்கறதுக்கள்ளயே முட்ஞ்சி போச்சுஇப்படியா போர் அடிப்பானுங்க

இந்த கதையை ஆரம்பத்துலயே ஆர்யாவுக்கு சொல்லி கூட்டிட்டு வந்திருந்தா, இந்தா பிரச்சனை வந்திருக்குமா? ஏன் தான் இந்த விஷயத்துல நம்ம ஹீரோக்கள்லாம் மாக்கானுங்களா இருக்கானுங்களோன்னு ஆர்யா லைட்டா அப்செட் ஆனாலும்,  கதையை கேட்டதுக்கு அப்பறம், நம்ம ஆர்யாவும் ப்ராஜக்ட்ல ஃபுல் இன்வால்வ்மென்ட் காட்டறதுக்காக, அஜித்தை போய் ஸ்டென்ட்டெல்லாம் காட்டி போலிஸ் கிட்டயிருந்து காப்பாத்தி கூட்டிட்டு வர்றாருவந்ததுக்கு அப்பறம் நம்ம தல,  சுவிஸ் பேங்க்ல இருக்கிற ஹோம் மினிஸ்டரோட பணத்தையெல்லாம் ஆர்யாவை ஹேக் பண்ணி எடுக்க சொல்றாரு, நம்ம ஆர்யாவும் நோண்டு நோண்டுன்னுலாம் நோண்டாம ஜஸ்ட் ஏதோ கூகிள் செக் பண்ற மாதிரி பார்த்துட்டு, அங்க சல்லி காசு இல்லைன்னு ரெஸ்பான்ஸ் கொடுக்கிறாருஅது எங்க டா போச்சுனு தேடி பார்த்தா, அதெல்லாம் துபாய்ல இருக்கிற ஹோம் மினிஸ்டரோட பொண்ணுக்கு வந்திருக்குதுஇப்ப எதுக்கு டா இப்படி கதையை சுத்தல்ல விடறாங்கன்னு யோசிக்கும் போதே, அந்த ஹோம் மினிஸ்டரோட பொண்ணு, ஒரு பாட்டுக்கு வந்து ஐட்டம் டேன்ஸ் போட்டுட்டு போகுது…. கருமமே, எல்லாம் ஒரு பாட்டுக்கு தானான்னு தலைல அடிச்சிக்கிட்டே படத்தை பார்த்தா, அப்பறம்  அந்த பணத்தையெல்லாம் நம்ம மங்காத்தா ப்ரேம்ஜி ஸ்டைல்ல நம்ம ஆர்யா அடுத்த சீன்ல எடுக்கறாரு….
           
இந்த ரணகளத்துல, கொடுத்த பணத்துக்கு காட்ஸில்லா தீவிரவாதி இன்னும் வந்து சேரலைங்கற கடுப்புல, தீவிரவாத கும்பல் ஹோம் மினிஸ்டர் பொண்ணை கடத்திடறாங்கநம்ம ஹோம் மினிஸ்டர் ஆர்யாவோட பொண்ணை கடத்திடறாருநம்ம அஜித் காட்ஸில்லாவை கடத்திடறாருமூனு பேருக்குமே அவங்க அவங்க தேவைங்கறதுல, எல்லாருமே எக்ஸ்சேஞ்ச் மேளா பண்ணலாம்னு, இந்தியா பார்டர்ல ஆஜராகுறாங்கஅங்க அஜித் சின்னதா ஒரு ஹீரோயிசம் பண்ணி, டாப்ஸியை காப்பாத்தி, மத்த எல்லாத்தையும் கொன்னுட்டு, ஹோம் மினிஸ்டரை கடத்திட்டு வந்து அவரை மூனு பக்கத்துக்கு நம்ம நாட்டு சிஸ்ட்த்தை பத்தியும், அரசியல்வாதிங்க எப்படி இருக்கனுங்கறதுயும் 4 பக்கத்துக்கு அந்நியன் ஸ்டைல்ல டயலாக் பேசி சாவடிச்சாரா, இல்லை டைம் பாம்ப் வெச்சி சாவடிச்சாராங்கறது தான் கதைஎல்லாம் முடிஞ்சு எழுத்து ஓடும், அப்ப வெளியே வந்துடுங்க, இனிமேலாவது ஏதாவது உருப்புடியா காட்டுவானுங்களான்னு நாங்க அங்கனயே உட்கார்ந்திருந்து ஏமாந்தோம்

 அப்பறம் படத்தை ஆரம்பிச்சதுல இருந்து ஒரே விஷயத்துல தான் குறியா இருந்தானுவ, அது என்னான்னாஆரம்பம்ங்கற வார்த்தையை அங்கங்க வர்ற மாதிரி பார்த்துக்கிட்டானுங்கபடத்தை முடிச்சனுப்பும் போது கூட அதை விடலை, நம்மளை பார்த்து நக்கலா சிரிச்சிக்கிட்டேமறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமான்னு ஒரு டயலாக்கை பேசறாரு, வேண்டாம் டா யப்பா, இதே போதும்னு எழுந்து வர வேண்டியதாய் இருக்கு

ஆரம்பம்ஒரு விஞ்ஞான விமர்சனம்

ஆரம்பம்படம் ஆரம்பிச்சிதல இருந்து முடியற வரைக்கும், என்னை ஒரு சீன் கூட அசைச்சு பார்க்கலை, என்னால படத்தோட ஒன்றவும் முடியலை, ஏதோ பண்றதை பண்ணுங்க டான்னு பார்த்துட்டு இருந்தேன்

தமிழ் சினிமாவுல Casting னு ஒரு டிபார்ட்மென்ட் தேவைங்கறது மட்டும் புரியுது. மிஷ்கின் படத்துல எப்படி எல்லாரும் மிஷ்கினாவே இருப்பாங்களோ, மணிரத்னம் படத்துல எப்படி எல்லாரும் மணிரத்னமாவே இருப்பாங்களோ, அப்படியே தான் இந்த படத்துலயும் எல்லாருமே விஷ்ணுவர்தனாவே இருக்காங்கஅஜித்துக்கு கம்மியா பேசற கேரக்டர், நயன்தாராவுக்கும் அதே எழவு கேரக்டர், ஆர்யாவுக்கு லொடலொடன்னு பேசற கேரக்டர் ஆனாலும் அவரே கம்மியா தான் பேசறாரு, டாப்ஸிக்குஹௌ ஸ்வீட்னுவந்து ஹக் பண்ற கேரக்டர், வில்லனுங்களுக்கு சிரிக்கிற / கத்தற / கெஞ்சற கேரக்டர்அம்முட்டு தான். இதை வெச்சே மொத்த படத்தையும் ஓட்டிட்டானுங்கஇந்த இடத்துல இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தை இவனுங்களே என்னை கம்பேர் பண்ண வெக்கிரானுங்கபல சமயங்கள்ல அஜித்துக்கு என்ன பேசறதுன்னே தெரியாம, கம்மியா பேசறாரோன்னுலாம் சந்தேகம் வருது….

இந்தளவு டல்லான கேமராவை, ஏன் தான் முயற்சி பண்ணாங்களோன்னு தெரியலை, திருட்டு விசிடில படம் பார்க்கறவனுக்கு மங்கலா தெரிஞ்சு தொலையனும் தான் இப்படிலாம் பண்றாங்களான்னும் தெரியலை, ரெகுலரான கேமராவா இல்லாம ஓம் பிரகாஷ் வித்தியாசமா முயற்சி பண்ணியிருக்கார்னு மட்டும் புர்யுது, ஆனா அது எடுபடலைன்னுமா எங்களுக்கு புர்யாம போய்ரும், அதுவும் புரிஞ்சிடுச்சு

யுவன் சங்கர் ராஜா பிண்ணனி இசைல ஏதோ ஸ்கோர் பண்ணினாலும், பாட்டுலாம் எப்ப டா முடியும்னு ஆகிடுது, “முடியாதுன்னு சொல்ல முடியாதுபாட்டு ஓகேன்னாலும், ஆனா ஒரு மாசம் கூட ஹிட் லிஸ்ட்ல இருக்காதுஇளையராஜா ஃபார்ம் அவுட் ஆகிட்டாரோன்னு யோசிச்சிட்டு இருக்கிற நிலைமைல, யுவன் சங்கர் ராஜா அவருக்கு முன்னால ஃபார்ம் அவுட் ஆகி, இளையராஜா எவ்ளோ பெரிய லெஜன்ட்டுனு நம்ம எல்லார்க்கும் காட்றாரு போலபேர் சொல்லும் பிள்ளை

படத்தோட ஸ்க்ரிப்ட் வெளிதோற்றம் ஏதோ ஸ்டைலிஷா இருந்தாலும், புது முயற்சி, இன்னோவோஷன்ங்கற பேச்சுக்கே இந்த ஸ்க்ரிப்ட்ல இடமே இல்லை. அதுவுமில்லாம இது மாதிரி கதைகள்லாம், காமிக்ஸ் புக்லயும், பாக்கெட் நாவல்கள்லயும் சல்லீசா கிடைக்குது, அதை ஏன் கஷ்டப்பட்டு எடுத்து இருக்கானுங்கன்னு தான் புரியலை, சில படம் பார்க்கும் போது ஏதோ டிராமா பார்க்கிற மாதிரி இருக்கும், ஆனா இந்த படம் பார்க்கும் போது, உண்மையாவே ஏதோ காமிக்ஸ் படிக்கிற மாதிரி தான் இருக்குஅதுலயும் குறிப்பா நயன்தாரா ஒரு பொண்ணை துபாய்ல பில்டிங் மேல இருந்து தள்ளி விடற சீன், எக்ஸ்சேஞ்ச் மேளா சீன், கம்ப்யூட்டர் ஹேக்கிங் ஸீன்…. இப்படி பலது சொல்லிட்டே போகலாம். படத்துல எங்கயுமே ஒரு க்ளாரிட்டி புண்ணாக்கே இல்லைலவ், சென்ட்டிமென்ட், சண்டைன்னு எல்லாமே மேலோட்டமா இருக்கு


சில சமயம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட ஹோட்டல்க்கு போய் உட்காருவோம், சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் வடை தயிர் அப்பளம் மோர்மிளகாய் பாயாசம் ஸ்வீட் பீடானு எல்லாமும் சாப்பிட்டிருப்போம், ஆனா சாப்பிட்ட திருப்தியே வராது. பசி மட்டும் தான் தீர்ந்திருக்கும். அதே மாதிரி தான், இங்கனயும் பாட்டு, சண்டை, சென்ட்டிமென்ட், துரோகம்னு எல்லா கருமமும் கிடக்கு, ஆனா ஒன்னும் பிடிக்க மாட்டேங்குது, ரெண்டரை மணி நேரம் மட்டும் எப்படியோ டைம் பாஸ் ஆகிடுது. இதுக்கு கம்னு ஃபேக் ஐடி கிட்டயே சேட்டிங்கை போட்டிருக்கலாமோன்னுலாம், வீட்டுக்கு வரும் போது வண்டியை மெதுவா உருட்டிட்டே யோசிச்சிட்டே வந்தேன், அவ்ளோ மெதுவா போயும், எனக்கு முன்னாடி ஒரு வண்டி என்னை விட மெதுவா போய்ட்டு இருந்தது, யார்ரான்னு பார்த்தா நம்ம அஜித் ரசிக சிகாக்கள்