Monday 18 February 2013

என்ன நடக்கிறது நம் ஆன்மீக மண்ணில்...



இதை எழுதி கொண்டிருக்கும் இந்த நாள் வரை என்னென்னமோ நடந்து விட்டது நம் அமைதி பூங்காவில். விஸ்வரூபம் திரைப்படம் அளவிற்கு சமீபத்தில் எந்த திரைப்படமும் வெளியிடுவதற்காக சர்ச்சைகள் ஏற்படவில்லை. விஸ்வரூபம் படம் ஜனவரி 12ந் தேதி திரையரங்குகளிலும், ஜனவரி 11ந் தேதி DTHலும் வெளியாகும் என்று டிசம்பர் மாதத்தில் ஒரு நாளில் அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்தே ஆரம்பித்த பிரச்சனை இது, அடங்க அடங்க எரிந்து கொண்டிருக்கிறது.

DTH என்றால் ஏர்டெல் நிறுவனம் தான் பிரதானமாய் முன்நின்று கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்தது,. அதன் படி, விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே, ஏர்டெல் டி.வி.யில் பார்க்க வேண்டுமானால் 1000 ரூ கட்டி, 11ந் தேதி அன்று இரவு 09.30 மணிக்கு குறிப்பிட்ட சேனலில் பார்த்து கொள்லலாம் என அனைத்து முண்ணனி நாளிதழ்களிலும் விளம்பரப் படுத்தி இருந்தனர். இதை திரைத்துறையினரும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் கடுமையாக எதிர்த்தனர். DTH-ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என முரண்டு பிடித்தனர். கமலும் தன் பங்குக்கு இது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி, காலத்திற்கேற்ற மாற்றம் என்றெல்லாம் சொல்லி பார்த்தார், பொருள் என்னுடையது என்று திமிர் காட்டினார், பிரசாத் கலர் லேப்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஓரங்கட்டியதை உவமை காட்டி நியாயம் கேட்டார்… ம்ஹூம்… ஒன்றும் மசியவில்லை. கமல் தான் இறங்கி வந்தார். திரையரங்கிலே முதலில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வேறு வழியின்றி வந்தது. ஜன.25 தியேட்டரிலும், பிப்.2 DTH-ல்லும் திரையிடப்படும் என்று முடிவு ஆனது.

இதெல்லாம் கொஞ்சம் மண்ணை கவ்வி, சுமூகமாக முடிந்தாலும், முஸ்லீம் அமைப்புகளிடமிருந்து வந்த பிரச்சனையை தான் சமாளிப்பதற்குள் கமலுக்கு போதும் போதும் என்றாகி விட்டிருந்தது.

பிரச்சனை என்னவோ இது தான், முஸ்லீம் மக்களை தவறாக சித்தரிப்பதாய் அனுமானித்து கமல்ஹாஸனிடம் தம் கண்டனங்களை தெரிவித்தனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்து, வேண்டுமானால் படம் வெளியிடும் முன் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காட்டுகிறேன் என வாக்களித்தார். அது குறித்து முஸ்லீம் மக்களும் சமாதனம் அடைந்து, அவ்வாறாக தவறாக சித்தரிக்க படவில்லையென்றால், அனைத்து முஸ்லீம் மக்களுக்கும் இனிப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

திரையிடும் தேதி அறிவித்த மாத்திரத்தில், அவர்களும் சொல்லி வைத்தாற் போல் வந்து திரையிட்டு  காட்ட சொல்லி வந்து நின்றனர். கமலும் அவரது வீட்டில் திரையிட்டு காட்டினார். படத்தின் இடைவெளியின் போதே upset ரியாக்‌ஷன் கொடுத்தனர். மீதி பாதி படத்தையும் பார்த்து விட்டு, அதிருப்தியை காரணமாய் கொண்டு எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றனர். என்ன ஏது என்று கமல் தடுத்து பிடித்து விசாரித்ததில், உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி விட்டு கிளம்பி சென்று விட்டனர்.

அடுத்த நாள் கமிஷ்னர் அலுவலகத்தில் அனைத்து 24 முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போய் கமல்ஹாஸனுக்கு எதிராக புகார் கொடுத்தனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்திலும் திரைப்படத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்தனர். நடுரோட்டில் ஆர்பாட்டங்களும், கோஷங்களையும் எழுப்பி மீடியா கேமாராக்கள் பதிவு செய்து கொள்ளும் வண்ணம் அரங்கேற்றினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்தன. கல் எறிந்து கண்ணாடிகள் நொறுங்கின. வெகு சீக்கரத்தில் ஒரு சினிமா பிரச்சனை, சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் காரணமாக தமிழக அரசும், விஸ்வரூபம் வெளியாவதை விரும்பவில்லை.

நீதிமன்றம் தரப்பில் இருந்து, நீதிபதி படத்தை தனிப்பட்ட முறையில் பார்த்து விட்டு தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார்கள். நீதிபதியும் படத்தை பார்த்து விட்டு, படத்தை வெளியிட அனுமதி அளித்தார். மணி அப்போது இரவு 09.40. அந்த நேரத்திலும் அரசு தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் அறிவுறுத்தலால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டை இரத்து செய்து, விஸ்வரூபம் படம் வெளியாகுவதற்கு பூரண அனுமதி அளித்தார்.

இதனால் திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அடுத்த நாள் திரைப்படமும் வெளியானது. ஆனால் அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு நீதிமன்றம் தரப்பில் இருந்து மீண்டும் தடை உத்தரவு வரவே, பெரும்பாலான திரையரங்குகளில் பாதி படத்தை மட்டும் திரையிட்டு, டிக்கெட்டிற்கு உரிய பணத்தை திருப்பி கொடுத்து, ரசிகர்களை திருப்பி அனுப்பினர். இது போல் ஓர் சூழலை தான் வன்முறையாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர் போலும்… விளைவு, தமிழகத்தில் மட்டும் 7 திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. வில்லிவாக்கம் AGS தியேட்டரை கொழுத்தப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லீம்கள் யாரும் பெரிதாக தியேட்டர் வன்முறையில் ஈடுப்பட்ட மாதிரி தெரியவில்லை. பிறகு யார் இதை செய்திருக்க கூடும் என்ற போது தான், இது ஒர் அரசியல் பிரச்சனை என்று பாதை வேறு ஒரு பக்கம் திருப்பம் எடுத்தது.

முதலில் விஸ்வரூபம் படம் ஜெயா டி.விக்கு தான் பெரும் பணத்தில் கொடுக்கப்பட இருந்தது. ஆனால், கமல் படத்தை DTH-லும் ஒளிபரப்புவதை காரணமாய் சொல்லி, கமலிடம் விலையை குறைக்க சொல்லி பேரம் பேசினர். அதற்கு உடன்படாத கமல், இருக்கவே இருக்கு விஜய் டிவி என்று விஜய் டி.விக்கு படத்தை விற்று விட்டார். அந்த கடுப்பிலோ என்னவோ, எதற்கோ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு போனவர், நமக்கு வரவிருக்கும் பிரதமர் நிச்சயம் ஒரு வேட்டி கட்டியவராய் தான் இருப்பார் என அங்கே கொழுத்திப் போட்டது விஸ்வரூபத்தில் வந்து வெடித்தது. இப்படியாக பிரச்சனைக்கு சுவாரஸ்யங்கள் சேர்ந்து கொண்டே போக, புதிய தலைமுறையும், சன் நியூஸும், ஜீ டி.வி என எல்லா செய்தி தொலைக்காட்சிகளும் எந்நேரமும் விஸ்வரூபம் பிரச்சனையை கவர் ஸ்டோரி ஆக்கினர்.

அப்போதைய நிலையில் தமிழகம் தவிர்த்து, கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் தமிழிலும், பிற மொழிகளிலுமாக படம் வெளியிடப்பட்டது. இதில் கேரளத்தில் மட்டும் வித்தியாசமாக முஸ்லீம்கள் படத்தை தடை செய்ய கோரி ஆர்பாட்டம் செய்த கொஞ்ச நேரத்திலே, இந்துக்களும் ஆர்பாட்டம் செய்து படத்தை வெளியிட கோரி, படத்தை வெளியிட்டு கொண்டனர்.

அந்த மாதிரியான ஒரு நேரத்தில் தான் கமல்ஹாஸன் ஒரு ப்ரஸ் மீட்டை ஏற்பாடு செய்து, இந்திய மக்களின் உணர்ச்சிகளை ஒரு பொறட்டு பொறட்டி எடுத்தார். இன்று வரை அந்த குறிப்பிட்ட Youtube video 608479 பேருக்கும் அதிகமாக பார்க்கபட்டு இருக்கிறது. 9 நிமிட வீடியோவில், முதல் 2 நிமிட வீடியோ, கமல் மீடியா ஆட்களின் சலசலப்பு அடங்கும் வரை பொறுமை காத்து, இப்ப பேசலாமா, என்று மிகவும் மென்மையாக  பேச்சை ஆரம்பிக்கிறார். தான் இந்த படத்திற்காக பெரும் செலவு செய்திருப்பதாகவும், அவருடைய சொத்துக்களும், வீடுகலும் அடகில் இருப்பதாகவும், படம் வெளியாகும் தேதி தள்ளிப்போக தள்ளிப்போக நஷ்டத்தின் மேல் நஷ்டமாய் வந்து விழும் என்றும், இந்த வீட்டில் நடக்கும் கடைசி ப்ரஸ் மீட் இதுவாக கூட இருக்கலாம். இந்த படம் வெளியிடப்படாமல் போகும் பொருட்டு, தான் ஒரு மதசார்பற்ற மாநிலம் தேடி போவேன் என்றும், அல்லது மதசார்பற்ற மாநிலம் இல்லையென்றால் மதசார்பற்ற தேசம் நோக்கி செல்வேன் என்றும் நெஞ்சை பிசைந்தார். தாமதமாக வரும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாக கருதப்படுவதால், தமக்கு நீதி மறுக்கப்பட்டுவதாகவே உணர்கிறேன் என்று கூறி வெளுத்து விளாசினார்.

இதற்கு பதில் அளிக்கவே, நம் முதல்வர் அடுத்த நாள் பகல் 1 மணிக்கு, ஓர் நீண்ட அறிக்கையை விடுத்தார். வார்த்தைக்கு வார்த்தை உடன் படும் வண்ணமும், முதல்வரின் புத்திசாலித்தனத்தை மெச்சும் வகையிலும் இருந்ததாக தமிழ்நாடே சில்லாகித்தது. அந்த நீண்ட பேட்டி, ஜெயா டி.வி.யில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வந்தது, அதுவும் தமிழக அரசின் வெளியீட்டின் பேரில்…

கமல்ஹாசனின் மேல் எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட வன்மம் கிடையாது என்றும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு தான் படத்தை தடை செய்த்தாக சொன்னார். தமிழ்நாடு திரைப்பட சட்டப்படி, அரசுக்கு ஒரு திரைப்படத்தை நிரந்தரமாக தடை செய்ய சட்ட வசதி இருந்தும், அதனை செய்யாமல் 144 தடை உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளதாக சொல்லி நம் எல்லோரையும் சந்தோஷ பட்டு கொள்ள சொன்னார். முஸ்லீம் அமைப்புகளும், கம்ல்ஹாசனும் உட்கார்ந்து பேசி முடிவு எடுப்பது மட்டுமே சுமூக தீர்விற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்.

மேலும் ஜெயா டி.வி.க்கு படத்தை விற்காத்தால் தான் இப்படி கமலுக்கு நெருக்கடி கொடுக்கிறேன் என்று சில தனியார் தொலைக்காட்சிகள் கூறியதை மறுத்து, முதலில் ஜெயா டி.வி.க்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, தான் ஓர் பங்குதாரர் கூட கிடையாது, அது ஒரு அ.தி.மு.கவிற்கு ஆதரவாய் செயல்படும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமே என கூறி எதையோ நமக்கெல்லாம் தெளிவுப்படுத்த விரும்பினார். தேவையில்லாமல் அவதூறு பரப்பிய அனைவரது மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் சில பகுதிகள் என உலகம் பூராவும் ஆங்காங்கே தடை செய்யப்பட்டு இருக்கும் போது தமிழக அரசு தடை செய்த்து மட்டும் எப்படி விமர்சனத்துக்குரியதாகும் என கேட்டு, நெத்தியடி அடித்து, ஒரே நாள் திரையிடப்பட்டதற்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்திருக்கிறது, அதனால் தான் முன்னெச்சரிக்கையாக படத்தை தடை செய்தோம் என வாதிட்டு மலைக்க வைத்தார்.

முதல்வரின் இந்த பேட்டி, செம ஹிட் அடித்து பத்திரிக்கைள் எல்லாம் இதே பேச்சாக கிடந்தன.

மற்ற மாநிலத்தில் தான் படம் வெளியாகி விட்டதே, திருட்டு வி.சி.டி.யிலாவது படத்தை பார்க்கலாம் என்று சி.டி கடைக்கு ஒதுங்கினால், தமிழகத்தில் ஒரே சி.டி. கடை கூட திறந்த பாடில்லை. என்னே, ஒரு prevention is better than cure என்று தமிழகம் ஸ்தம்பித்தது.

முதல்வரின் சட்ட ஒழுங்கு அக்கறை கண்டு, உண்மையில் தமிழக மக்கள் அனைவரும் நெஞ்சம் நிமிர்த்தி, இதே போல் எல்லா துறையிலும் ‘அம்மா’ செயல்பட்டால் எப்படி இருக்கும், என ஒவ்வொரு தமிழனையும் பொறாமை கனவு காண செய்தார்.

இப்படி கமலின் பேட்டியினை தொடர்ந்து, அம்மாவின் பேட்டியும் அடுத்தடுத்து வரவே, தமிழகம் குழம்ப ஆரம்பித்தது. இவ்வளவு நாளும் கமல்ஹாசனை குருட்டுத்தனமாய் ஆதரித்த மக்களுக்கு ஜெ.வின் பேச்சு கொஞ்சம் யோசிக்க வைத்தது. நம்ம கமல் தான் தேவையில்லாமல் தீவிரவாதிங்களை மையமா வைச்சு வணிக படம் எடுத்து, இங்க இந்தியாவுல இருக்கறவங்களையெல்லாம் குழப்புறாரோன்னு குமுறல் விடுத்துனர். ஒருவேளை இரு பக்கமும் நியாயம் இருக்க கூட வாய்ப்பு உண்டு என நினைத்தோ என்னவோ, கமலின் ஆதரவு கோஷங்கள் கொஞ்சம் சத்தம் குறைந்தன.

இந்த படம் வெளியானால் ஒரே வெட்டு குத்து களேபரமாய் நடக்குமா என்றால் அப்படியும் கிடையாது. விஸ்வரூபம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அவ்வளவே…. வில்லன் கதாபாத்திரங்களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அவ்வளவே!

இன்னொரு பக்கம், நிஜத்தில் நடக்காத ஒன்றை அவர் படமாக எடுத்து விட்டாரா என்றால், அப்படியும் இல்லை. தாலிபான்கள் இடையே வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதோ, அவர்கள் ஒருவரை கொலை செய்யும் போது எப்படி மதத்தை துணைக்கு அழைத்து புனித குர் ஆனை ஓதி கொடூர கொலையை, புனித போராக மாற்றுவார்களோ அதையே தான் படம் தாங்கி வந்துள்ளது.

அங்கே இங்கே என சுற்றி, கடைசியாக பிப்.3-ந் தேதி தான் பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்தது. முஸ்லீம் அமைப்புகளும், கமல் தரப்பினரும் சந்தித்து, படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக கமல் சம்மதம் தெரிவிக்க, படம் வெளியானது.

இன்னொரு புறம், DTH பக்கம் கமல் பெரும் சரிவை சந்தித்தார். தமிழில் 1000 ரூபாயாகவும், பிர மொழியில் 500 ரூபாயாகவும் பணம் வசூலித்து காண்பிக்க இருந்த விஸ்வரூபம், பின் 600, 300 என விலை குறைந்தது. 30 முதல் 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு போனது என அதிகார பூர்வமாய் அறிவித்தனர். DTH சந்தாதாரர்களை பொறுத்த வரை, அவர்களும் கட்டிய பணத்திற்கு பல தேதி மாற்றங்களை சந்திக்க நேர்ந்து, கொத்து கொத்தாக கட்டிய பணத்தை திரும்ப பெற்று கொண்டனர்.

இதற்கிடையில், வரியை ரத்து செய்யவே படை திரண்டு போராடும் திரை உலகினர், கமல் விஷயத்தில் மட்டும் நீண்ட மௌனம் சாதித்த வேளையில், அர்ஜீன் தான் முன் வந்து, “கமலுக்கே இந்த கதியென்றால் சினிமா செய்யவே பயமாக இருக்கிறது” என்று மீடியா முன் தோன்றி கமலுக்கான தன் ஆதரவு கரங்களை நீட்டினார். அவரை தொடர்ந்து ஆளாளுக்கு யோசித்து யோசித்தே கமலுக்கு ஆதரவு குரல் எழுப்பினர். அதில் ராதிகா ஒரு பக்கம்  கமலுக்கு ஆதரவு தெரிவிக்க, சரத்குமார் அதற்கு நேர் எதிராக ”ஒரு படம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு விஸ்வரூபம் ஒரு உதாரணம்” என்று எதிர்ப்பு தெரிவித்து வேடிக்கை காட்டினார்.

இப்போது இறுதியாக பிப்.8ந் தேதி, விஸ்வரூபம் பல சுமூகங்களுக்கும் சமரசங்களுக்க்கும் இடையில் வந்தே விட்டது. இஸ்லாம் மதத்தை அப்படி எங்கு தான் கொச்சை படுத்த பட்டிருக்கிறது என்று தேடி பார்த்தாலும் காணோம். வில்லன் கதாபாத்திரமாக எத்தனையோ இந்துக்கள் கதாபாத்திரங்களும், சேட்டு கதாபாத்திரங்களும், கிறிஸ்டியன் கதாபாத்திரங்களும் இதற்கு முன் காண்பிக்க பட்டிருக்க, இஸ்லாத்தை தழுவியுள்ள ஒரு கதாபாத்திரத்தை காட்டுவதை மட்டும் எப்படி வன்மம் ஆகி போனது என்று தெரியவில்லை. குற்றமுள்ளவன் நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று இஸ்லாமியர்களை பற்றி மற்றவர்கள் எளிதில் யூகித்து கொள்ளும் வகையில், முஸ்லீம்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியதாய் உள்ளது.

’அயன்’ என்று ஒரு படம் வந்தது, அதில் வரும் ஒரு சேட்டு இளைஞன், கள்ள கடத்தல் செய்பவனாகவும், கொலை செய்பவனாகவும் காட்ட படுவான். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மொத்த சேட்டு அமைப்பினரும், ஒன்று திரண்டு ஆர்பாட்டம் நடத்தினால், நாம் மேற்கொண்டு சேட்டுக்களிடம் பழகுவதை பற்றி யோசிப்போமா, மாட்டோமா?

மொத்த முஸ்லீம் மக்களுக்கும் நல்லது செய்வதாய் நினைத்து கொண்டு, முஸ்லீம் பிரதிநிதிகள் செய்த கோமாளித்தனங்கள், முஸ்லீம் மக்களுக்கே எதிராய் போய் முடிய இருப்பது தான் துயரம்.

 இனி ஒரு படம் வெளிவர தணிக்கை துறையினை மட்டும் கடந்து வராமல், மதத் தலைவர், லெட்டர் பேட் குழுக்கள், ஜாதி சங்கங்கள் என எல்லோரையும் கடந்து, அவர்கள் சம்மதம் வாங்கி, அவர்கள் கேட்கும் பணத்தை பைசல் செய்து, அவர்களை மீடியாக்களுக்கு பிரபலமாக்கி விட்டு, மாநில அரசின் ஒப்புதல் வாங்கி, இதற்கிடையில் நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடுத்து விட்டால், நீதிபதி ஐயாவை படத்தை போட்டு காட்டி, தீர்ப்பு வாங்கி, மேல் முறையீடுகளை தகர்த்து எறிந்து வெளி வர வேண்டும். கமல் பெரும் முதலாளி என்பதால் சமாளித்து கொண்டார், மற்றவர்கள் கதி?

இந்தியாவில் வாழும் சில முஸ்லீமகளுக்கு, பிறந்தது முதல் இந்தியாவிலே இருந்தாலும், இந்தியாவை அவர்களது தாய்நாட்டாக பாவிக்க மாட்டார்கள். காரணம் பாகிஸ்தானும், ஆப்காணிஸ்தானும், அரபி நாடுகளும் தான் எப்பொழுதும் விருப்பமான நாடாக இருக்கிறது. பிறந்தது, படித்தது, வாழ்ந்தது, இறந்தது என அத்தனையும் தலைமுறை தலைமுறையாக இந்தியாவிலே கழித்தாலும், இந்தியா எப்படி அவர்களுக்கு இரண்டாம் பட்சமான நாடாகி போனது என்பது கேள்விக்குறி. அங்கே உருது பேசுகிறார்கள், என்ற காரணமே மற்ற நாடுகளை அவன் தாய்நாடாக பாவிக்க போதுமானதாக இருக்கிறது.

முஸ்லீம் மக்களே, முஸ்லீம் லீக் அமைப்புகளை ஆதரிக்க தயாராய் இல்லை. மூஸ்லீம் மக்களை கேட்டால், முஸ்லீம் சங்கங்கள் இஸ்லாத்தை போதிப்பதற்காக தான் உருவாக்கப் பட்டது, அப்போதெல்லாம் அவர்களின் பால் எங்களுக்கு பிடிப்பு இருந்தது, ஆனால் எப்போது அவர்கள் அரசியல் ஆதாயத்திற்க்காக வழி மாறி சென்றார்களோ, அப்போதே அவர்களின் மேல் பிடிப்பு தளர்ந்து விட்டது என்கின்றனர்.

எந்த ஒரு சிறுபான்மை மதத்தில் இருக்கும் ஒருவனும் 20 ஆட்களை திரட்டி, நல்ல ஒரு பெயரை சூட்டி, அமைப்பு ஆரம்பித்து கொள்ளலாம், அதனை உரிய அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம், 10x10 அலுவலகத்தின் முன் போர்டு மாட்டி கொள்ளலாம், பிரச்சனைகளை தேடி சென்று கட்ட பஞ்சாயத்து நடத்தலாம், இல்லாத ஒரு பிரச்சனையை பூதாகரமாக சித்தரித்து ஆர்பாட்டம் நடத்தலாம், அடுத்தவரை கலங்கடிக்கலாம், பிரச்சனை பண்ணாமல் இருக்க பணம் கேட்கலாம், கிடைக்கும் பணத்தில் லாபம் பார்க்கலாம், கேட்டால் மதத்தை காப்பாற்றுகிறேன் என்று பீத்தி கொள்ளலாம், அங்காங்கே பெட்ரோல் குண்டுகளை வீசலாம், வன்முறை செய்யலாம், போலீஸ் கைது செய்தால் சிறுபான்மை பெயரை சொல்லி மதக்கலவரத்தை உண்டு செய்யலாம். இது தான் நாட்டின் நிலைமை.

இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகள் எல்லாம் இதற்கு முன் சொல்லி கொள்ளும் வகையில் என்ன தான் செய்து உள்ளனர் என்று திரும்பி பார்த்தால் ஒஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இறந்து போனதற்கு, சென்னை இராயப்பேட்டையில் உள்ள மசூதியில் ஈமகாரியம் செய்தனர். தீவிரவாதி இறந்ததற்கு ஏன் ஈமகாரியம் செகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, ஆயிரம் தான் இருந்தாலும் அவர் ஒரு முஸ்லீம் என பதில் கொடுக்கின்றனர்.

ஒருவன் தீவிரவாதியாக இருந்தாலும் அவன் முஸ்லீமாக இருக்கும் பட்சத்தில் அவனை ஆதரிக்க ஒரு சாரர் முஸ்லீமகள் தயாராய் இருக்கின்றனர். அவர்களை பிற சாரர் முஸ்லீம்கள் கேள்வியும் எழுப்புவதில்லை, தவிர்க்கவும் தயாராய் இல்லை.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அப்பாவி முஸ்லீமகள் தீவிரவாதிகளின் இருப்பால் நசுக்கப்படுவதை போல, இந்திய முஸ்லீம்கள் இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகளின் இருப்பால் புறக்கணிக்கப்பட ஆவனவற்றை முஸ்லீம் அமைப்புகள் செய்து வருகின்றன.

அதே சமயம் ஒரு திரைப்படம், இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டு பண்ணுகிறது என்றால், திரப்படத்திற்கு எவ்வகையான முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்பதை காட்டுகிறது.

நியாயமாக இந்து மக்கள் தான் இந்த படத்தை தடை செய்ததற்காக போராடி இருக்க வேண்டும். கேரளாவில் செய்தது போல், படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இல்லை. படம் பார்த்து வசியப்பட்டும் அளவிற்கு நாங்கள் மடையர்கள் இல்லை என்று, ஆனால் எந்த இந்து கட்சியினரும் அதை செய்யவில்லை. தமிழக மக்கள் சினிமா பைத்தியம் எனவும், சினிமாவில் வருவனவற்றையே மக்கள் நிஜவாழ்வில் அர்த்தப்படுத்தி கொள்வார்கள் என்று முஸ்லீம் மக்கள் உள்நோக்கோடு போராடுவது பற்றி யாருக்கும் அபத்தமாகவோ, சொரணை அற்றதாகவோ படவேயில்லை. இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலே மக்கள் இருப்பதாகவும், கதாநாயகனை நல்லவனாகவும், வில்லனை கெட்டவனாகவும் மக்கள் அர்த்தப்படுத்தி கொள்வார்கள் என்று அஞ்சி படத்தை தடை செய்வது, தடை செய்பவர்களின் முதிர்ச்சி அறிவை பற்றி சந்தேகங் கொள்ள செய்கிறது.

மதம் சார்பான விமர்சனம் என்றால் இஸ்லாமிய சமூகம் தான் அதிகம் அடிவாங்குவது தான் முஸ்லீம் மக்களுக்கு அயர்ச்சி தரும் விஷயமாக இருப்பதும் ஒரு புறம் துயரம் தான். ஓரளவிற்காவது modernize ஆகி வரும் இந்து மதத்திலும், கிறுத்துவ மதத்திலும் ஆயிரம் அபத்தங்கள் உள்ளடங்கி கிடக்க,  இஸ்லாமிய மதத் தலைவர்களின் முழு ஆதிக்கத்தில் இருக்கும் modernize ஆக வாய்ப்பு அவ்வளவாக இல்லாத இஸ்லாம் மதத்தை மட்டும் விமர்சித்து விமர்சித்து தோரணம் கட்டுவது இஸ்லாமியர்களை மேலும் அந்நியப் படுத்தும் என்பதாலே, பல இஸ்லாம் உள் அமைப்புகளை இச்சமயத்தில் தவிர்க்கிறேன். ஆனால் மெல்ல மெல்லவாவது ‘தலாக் தலாக் தலாக்’ முறை, மகளிர் பர்தா அணிவது, போன்ற இன்னபிற விஷயங்களை கடந்து வராமல், அவர்களுக்குள் இருக்கும் அந்நியத்தன்மைக்கு விடுதலை கிடைப்பது என்பது கனவு தான்.

அதிக மனைவிகள் வைத்து கொள்ளவும், அதிக பிள்ளைகள் பெற்று கொள்ளவும், முஸ்லீம்களின் ஜனத்தொகையை பெருக்குவதை நோக்கமாக போதிக்கவும், தலாக் தலாக் தலாக்கை வழிநடத்தவும் நேரடி மதத் தலைமையே ஈடுபாடு காட்டுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இது அப்படி இல்லை, அது ஒரு வதந்தி என எந்த பக்கத்தில் இருந்தும் மறுப்பு வரவும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் பிற மதத்தினர் இஸ்லாமியர்களை பார்த்து குழம்ப தான் செய்வார்கள் என்று முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே, மாலை 6 மணிக்கு மேல், யாரும் முஸ்லீம் ஆட்டோக்களில் ஏற மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்பி பயன் இல்லை.

தீவரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற பேர்வழியில் இங்குள்ள அநேகம் பேர், முஸ்லீம் மக்கள் எதில் நிறுத்துவது என்று தெரியாமல் குழம்பி மிரட்சியில் இருக்கின்றனர். இப்போது முஸ்லீம் அமைப்புகளும் கட்ட பஞ்சாயத்துகளில் இறங்கி பிறரை அச்சுறுத்துவது, எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. முஸ்லீம் மக்களின் நிஜ அக்கறையை கருத்தில் கொள்ளாமல், வெறும் வியாபாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஆர்பாட்டம் செய்து வரும் அமைப்புகள், அவர்களது மக்களுக்கு செய்வது துரோகம் என சொல்லாமல், வேறு எந்த விதத்திலும் வகைப்படுத்த முடிவதில்லை.

படத்தை தடை செய்யும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் எந்த இடத்திலும் உணர்வுப்பூர்வமாகவோ, மனித உரிமைக்கோரலாகவோ பதிவு செய்யப்படவில்லை. ’எங்களை தொட்டால் என்ன ஆகும் தெரியுமா’ என்று காட்ட படுவதாகவே இருந்தது.

இந்த நேரத்தில் மதம் என்பது ஒருங்கினைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று நினைவு கொள்கையில் அயர்ச்சியே மிஞ்சுகிறது.