Monday 28 April 2014

Maan karathey


நான் கவனித்த வரையில் A.R.முருகதாஸ் திரும்ப திரும்ப ஒரே தவறை தான் வம்படியாக செய்கிறார். அப்போதைய ட்ரெண்டில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களை நம்பி படத்தை ஆரம்பிக்கிறாரே தவிர, கதை - திரைக்கதை அம்சங்களை உதாசீனம் செய்கிறார். ஒரே விதிவிலக்கு, எங்கேயும் எப்போதும்... மீதி எல்லாம் வரிசையாக அடி வாங்கி கொண்டிருக்கிறது, படம் ரீலிஸான 2-3 நாட்களுக்கு தியேட்டர்கள் பரபரப்பாக இயங்கும். அதன்பின் படத்தின் லட்சனம் தெரிந்து உஷாராகி கல்தா கொடுத்து விடுவார்கள். சிலரே சிலர் மட்டும் அவரின் தயாரிப்பில் வெளி வந்த படங்களை க்ளாஸிக் என்று சிலாகித்து கொண்டிருப்பர், அதுவும் 10 நாட்களுக்கு மட்டுமே. இது ஆரம்பத்தில் 'பலராக' இருந்தது, இப்போது 'சிலராகி' விட்டது , இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் அருகி டோட்டலாக காலியாகி விடும்.

பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்-லைனகள் கேட்டே ஓகே செய்யப்படுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் "மான் கராத்தே" திரைப்படமும் கூட பிரமாதமான ஒன்-லைனை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு எப்படி திரைக்கதை என்னும் தீனி போடுவது என்று தெரியாமல் தவியாய் தவித்து இருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக கூட இருந்தது.

பொதுவாக ஹீரோயின்களை லூஸு போல் சித்தரிப்பது தான், தமிழ் சினிமாவின் பிரதான வழக்கம். இதில் ஒரு படி மேலே போய் ஹீரோயினின் அப்பாவையே லூஸாக சித்தரித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

+2 டொக்கு அடித்த பெண்ணின் அப்பனே, இப்போதெல்லாம் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள்.  அப்படியே கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள் பொண்ணு பார்க்க வந்தாலும் அவர்களிடமே salary slip, allotment order, bank balance, pass book எல்லாம் காட்ட சொல்லும் இந்த காலக்கட்டத்தில், ஹன்சிகாவின் அப்பாவான சாயாஜி ஷிண்டே, 10 திருக்குறளை சொல்லும் பையனுக்கே தன் பொண்ணை கொடுப்பேன் என்று எண்டர்டெயின்மெண்ட் மூவி டச் கொடுக்கிறார்... கொடுமை.

ஆங்காங்கே அனிருத், முருகதாஸ் மற்றும் சில நடன கலைஞர்கள் எல்லாம் எட்டி பார்க்கிறார்கள். இவர்கள் என்னா பெரிதாக புடுங்கி விட்டார்கள் என்று Guest appearance கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன், ஹன்சிகாவே Guest appearance கொடுத்தது போல் தான் இருந்தது.


No comments:

Post a Comment