Wednesday 14 January 2015

I – Movie Review





’ஐ’ மிகவும் சிம்பிளான ஸ்டோரி தான் என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதமும், வழங்கிய விதமும் திரும்பி பார்க்க வைக்கிறது. சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லி விட்டதில் ‘ஐ’ குழு வெற்றியடைகிறது என்றே நினைக்கிறேன். இந்த படத்தை நிச்சயமாக ஓர் சினிமா என்றும் கமர்ஷியல் சினிமா என்றும் ஒத்துக் கொள்ளலாம்.

First look, Trailer தேர்வு எல்லாம் இவ்வளவு சிம்பிளான கதையை யூகிக்க முடியாத வண்ணமே இருந்தது என்றே சொல்ல வேண்டும். எதையோ எதிர்பார்த்து போய் உட்கார்ந்தால் வேறு என்னத்தையோ காட்டுகிறார்கள், ஆனால் அவ்வளவு ஒன்றும் கடுப்பாக இல்லை. ஒரு முறை பார்க்கலாம்.

விக்ரம் ஓர் பாடி பில்டர். மிஸ்டர்.இந்தியா கனவோட வாழ்ந்து கொண்டிருக்க, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மாடலிங் துறையில் அடியெடுத்து வைக்க நேரிடுகிறது. ஒரே பாய்ச்சலில் ஓஹோவென வளர, பல எதிரிகள் முளைக்கின்றனர். எதிரிகள் அனைவரும் கூட்டு சேர்ந்து சதி செய்து நாயகனை உருக்குலைத்து விடுகின்றனர். நாயகனும் எதிரிகளை பதிலுக்கு உருக்குலைத்து பழித்தீர்த்துக் கொள்கிறார். அவ்வளவு தான் கதை. கதையை சொல்லி விட்டேன் என்று ஃபீல் செய்ய வேண்டாம், இது ஐ படத்தின் கதை அல்ல, தமிழ் சினிமா என்ற பெயரில் வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லா படத்திற்கும் இது தான் கதை. ஆனால் கதையை Present செய்த விதம் தான் கவனித்தலுக்குரியது, அதுவுமில்லாமல் படம் பார்க்க பார்க்க அடுத்த சீன் இது தான் என திரையரங்கில் வரிசைக்கு ஒருவர், கமெண்ட் செய்து கொண்டு இருப்பார்கள். அது நீங்களாகவும் கூட இருக்கலாம். அதனால் கதை தெரிஞ்சு போச்சேன்னு ஷாக் ஆகவேண்டாம்.

ஒரு க்ளீஷே இருக்கிறது...
அதை எப்போது நிறுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை, அது மக்களுக்கு போரடிக்கிறது என்ற விஷயத்தை யாராவது திரையுலகத்திற்கு சொல்லியாக வேண்டும். அது வேறு ஒன்றும் இல்லை, காதலில் விழும் நாயகனுக்கு எங்கு திரும்பினாலும் நாயகியாகவே தெரியும். நாயகனுக்கு மட்டும் பல்லு போன பாட்டி பாரின் ஃபிகர் மாதிரி தெரியும், டிச்சி தண்ணியில் ஹீரோயினின் கன்னக்குழி தெரியும், ஓர் முழு பாட்டிற்கு டூயட் ஆடினதன் பின்பு தான் டூயட் ஆடியது காதலியுடன் அல்ல ஓர் லேடி கான்ஸ்டபிளோடு என்று தெரியும், இது பரவாயில்லை… லவ் ஃபீலிங் பாடுகிறேன் என்று, கழண்டு விட்ட மாதிரி தனியாக ஆடிக்கொண்டு போன பல ஹீரோக்களை சென்னை மவுண்ட் ரோடு கண்டிருக்கிறது.

இன்னொரு க்ளீஷே இருக்கிறது…

  •  ஹீரோ லவ் செய்வார். ஹீரோயின் மறுப்பார்  
  •  ஹீரோ ஃபீல் செய்வார். ஹீரோயின் ஃபீல் செய்வார்.
  •  ஹீரோ டிஸ்டன்ஸ் கீப் அப் செய்வார். ஹீரோயின் லவ் செய்ய ஆரம்பித்து விடுவார்.
என்னங்கடா டேய்… நானும் இது போல பல ஃபிகர்களை டிஸ்டன்ஸ் கீப் அப் செய்திருக்கிறேன். மேலயும் கீழயும் பார்த்துட்டு, அவர்களும் டபுள் டிஸ்டன்ஸ் தான் கீப் செய்கிறார்கள். மாறாக, ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’ டெக்னிக் செய்கிறவர்களுக்கெல்லாம் அசால்ட்டில் ஃபிகர் மடிகிறது.

ஏன் வரலாற்றை தொடர்ந்து இருட்டடிப்பு செய்கின்றனர்? நமது வரலாற்று ஆசிரியர்களும் இது குறித்து வாய் திறவாமல் இருப்பது பற்றி ஆச்சர்யம் அடைகிறேன் !

ஐ போன்று 100 படம் வந்தால் மனிதனுக்குள் இருக்கிற கருணை, அறம் குறித்த பார்வையெல்லாம் ஒட்டுமொத்தமாக காலியாகி விடும். ஒரு கமர்ஷியல் சினிமாவில் கருணை, அறம், பேரிச்சம் பழம், கோதுமை உப்புமா எல்லாம் எதிர்ப்பார்ப்பது அநியாயம் தான் என்றாலும்… இந்த படம் ரொம்பவும் சித்ரவதை செய்வதை ஊக்குவிப்பதாக படுகிறது.

அடிதடி எல்லாம் மிகவும் போரடித்து போய், புதிது புதிதாக அழிவுமூலங்களை தேடி தேடி திரைக்கதையில் புகுத்துகின்றனர். அவர்களுடைய கடின உழைப்பை நான் மதிக்கிறேன், ஆனால் இந்த உழைப்பை வேறு திசையில் எதிர்பார்க்கிறேன். அவ்வளவே! சமரசம் சமாதானத்திற்கென்றெல்லாம் ஓர் சக்தி இருக்கிறது. அதை பற்றியும் பல படங்கள் வரத்தான் செய்கிறது. முன்னா பாய் MBBSஐ மறு உருவாக்கம் செய்தவர்கள், ஏன் லஜே ரஹோ முன்னா பாயை மறு உருவாக்கம் செய்யவில்லை? வருமானம் வராது அவ்வளவு தானே... கப்பல், மீகாமன், வெள்ளக்கார துரை, வலியவன் போன்ற படங்களெல்லாம் எடுக்கும்போதே சுமாராக தான் ஓடும் என்றே தெரிந்தே தான் எடுக்கிறார்கள். போட்ட காசு வந்தா போதும் என்று ஓப்பனாகவே சொல்கின்றனர். ஏன் இதையும் அதே ஆட்டிடுயூடில் எடுக்க கூடாது?

’அன்பே சிவம்’ படத்தின் இறுதியில் ஜஸ்ட் லைக் தட் எல்லோரையும் மன்னித்து விட்டு பொடிநடையாக ஓர் நாய்க்குட்டியோடு நடந்து போகும் கமல் என் நினைவில் வருகிறார். Saw, Wrong turn, Resident evil, Hostel, Final destination போன்ற படங்களால் ஈர்க்கப்பட்டு இது போன்ற படங்களை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறார்கள் என்று யூகிக்கிறேன். ஏன் திரும்ப திரும்ப எல்லோரும் ஹாலிவுட்டையே குறிவைத்து நகல்/ இன்ஸ்பிரேஷன் / போட்டி என சுற்றி வருகிறார்கள் என தெரியவில்லை. ஹாலிவுட்டை விட்டால் கொரியன், அதையும் விட்டால் ஈரானிய படம். ஏன் இப்படி?

இந்தியா சினிமாவிற்கென்றும், குறிப்பாக தமிழ் சினிமாவிற்குன்றும் ஒரு ட்ரெண்ட் & டிமாண்ட் இருக்கிறது. அதை தக்கவைத்து கொண்டாலே போதுமானது.

நமக்கு January February நன்றாக தெரியும் என்றாலும், 1 2 3 சொல்லி கொண்டிருந்த குழந்தை திடீரென்று January February சொல்ல ஆரம்பித்தால், குழந்தை சொல்லி முடிக்கும் வரை நாம் பொறுமையாக காத்திருப்போம் இல்லையா? அது போல் தான் ஷங்கர் படங்களும்… 1 2 3 சொல்லி கொண்டிருக்கும் தமிழ் படங்களில், ஷங்கர் படம் January February சொல்கிறது. அதில் ‘ஐ’ படமும் ஒன்று…



No comments:

Post a Comment