Saturday 25 May 2013

ப்ராய்லர் கோழிகள் - 2

ஃபேஸ்புக்கில் ப்ராய்லர் கோழிகள் பதிவினை பார்த்து, பூங்குலழி சண்முகம் தெரிவித்த எதிர்வினை இது:

1) பசி தீர்ந்த ஒரு மிருகம் போல்? உலவி கொண்டிருந்தேன்.

குஜராத், சிலோன் ரயிலெரிப்பு.எல்லா கொடுமைகளும்.
இப்படித்தான் ஆரம்பமாயிருக்கும். (ஒட்டககதைபோல்.) உறவுகளையே காயப்படுத்திவிட்டு.உலகத்தில் அமைதியையே எதிர்பார்ப்பது
எந்தவகையில் சரியாகும். ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பரை பாருங்கள் என்பார்கள்.நண்பர்களே போதும் என்றால் நண்பரை எவ்வகையில் சரிபார்ப்பது.

நாய்.எழும்புத் துண்டைக் கடித்து அத்துண்டு போய் நாயின் வாயை குத்தி -கிழித்து ரத்தம் வரும்போது,.அது ரசித்துசுவைப்ப்து.போல் தன ரத்தமே என்பதை அறியாமல் எங்கிருந்தோ அதற்கு ரத்தம் கிடைத்து சுவைப்பதுபோல் எண்ணிக்கொள்கிறது.... -

அது போல் நீ நான்கு நாட்களாக உனக்குள்ளேயே ஒரு வஞ்சக மனத்தை உருவாக்கிக் கொண்டு.யாரையோ ஜெயித்து விட்டதைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய்.

வடிவுக்கரசியே ஆனாலும் அவளின் வாழ்க்கையே ஏமற்றமாகி விட்டதால் வந்த வலியும்,அவள் இடத்தி இருந்து பார்த்தால் அதுவும் சரியாவே இருக்கும்.

உன்னைக் கட்டுபடுத்தவே உன்னால் முடியவில்லையே ,அம்மா, அப்பா யார் சொன்னாலும் நீ செய்ததே சரியென்றால் குஜராத் இலங்கை எல்லாமே சரியாத்தான் இருகிறதோ ?
ஆரம்பத்த்தில் இப்படிதான் உருவாக்கி இருப்பார்கள்.

ஏசு,அன்னை தெரசா,காந்தி,நம் முன்னோர்கள் பாட்டிகள். போன்றவர்கள் தான் அவமானப் பட்டாலும் நாம் யாரையும் அவமானப் படுத்திவிடக் கூடாது.
என்று எண்ணிக்கொண்டும், இன்னும், கூட இருப்பவர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்.நம்மிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பசி தீர்ந்த ஒரு மிருகம் போல் உலவி கொண்டிருந்தேன்.
கூட்டிக்கழித்துப்பார் , எங்கு தவறு நடந்திருக்கிறது மாற வேண்டியவர்கள் யார்?

லளிகம் என்கிற கிராமத்தைத் தவிர உலகமே தெரியாமல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ,(உலகமே கைக்குள் ) என்று படித்த நீ செய்ததும் சரியா?
என்ன மாற்றத்தை எதிர்பார்த்ததாய்/ மாற்றம் வரவேண்டியது நமக்குத்தான்.
வளர வேண்டிய வயது, வயதானவர்களை வேதனைப் படுத்தக் கூடாது.

இந்த சூழ்நிலையை நீ மட்டுமே உடனே சரி செய்தாக வேண்டும் , இல்லையென்றால் அவர்கள் உன்னை மன்னித்து விடுவார்கள்

ஒருவரைப் பழி வாங்க வேண்டும் என்றாலும் மன்னிப்பது
ஒன்றே சரியான வழி.---- வாழ்க வளமுடன்
(எனக்கும் பெரியதாக எழுதத் தெரிந்திருக்கிறது).


2) பஸ்ஸில். நடந்தது என்ன?

டூர் பஸ்ஸில் முன்னதாக ஏறினால் முன்னாடி சீட் .நாங்கள் வழக்கம்போல் கடைசியில் தான் ஏறுவோம். கடைசி சீட்டிற்கு. முன்னாடி காலியாக இருந்ததால் சம்பந்தப்பட்டவர். உட்கார்ந்துவிட்டனர். இடையில் ஓடிவந்த பெண் அவர்களை எழுப்பிவிட்டு விட்டாள். இவர்களும் அந்தப்பெண்ணிடம் "பேசசு வாங்க முடியாமல்" கடைசி சீட்டிற்கே வந்து விட்டனர்.இடையில் அந்தப் பெண் பேசியது அதிகம்தான்
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் கடைசி சீட்டிற்க்கு உரிமையாளர்கள் வந்து சேர்ந்தோம்.? இதுநடந்து இரண்டு மணிநேரம் கழித்துத் தான். அந்தப்பெண் எங்கள் சீட்டிற்க்கு
வர விரும்பியது. அந்தப் பெண்ணிற்கு இடம் கொடுக்கப
பிடிக்காததால் நான் எதற்கு இடையில் என்று சொல்லி எழ முயற்சி செய்தார் சம்பந்தப்பட்டவர்."யார் என்று புரிந்ததா?
இது எதுவுமே தெரியாமல் கடைசியில் வந்தவர்கள் எழுந்தவர் மீது கோபப்படுகின்றனர்.

இதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் சேர்த்து வைத்த எண்ணங்கள்தான்.கண்,காது,மூக்கு. வைத்து இவ்வளவு பெரியதாகப் போய்விட்டது.(வேடன் வில் அம்பு கதை அந்தக காலததுக்கதை).பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதுபோல் ஆகிவிட்டது.--
------வாழ்க வளமுடன்.



                                                                           - பூங்குழலி சண்முகம்



அன்புள்ள பெரியம்மா, 

 


உப்பு சப்பு இல்லாத, லாஜிக் இல்லாத, நடுநிலை இல்லாத, ஆர்வக்கோளாறு கொண்ட, பிற்போக்கு தனமான கமெண்ட்டுகளுக்கும் அறிவுரைகளுக்கும் நான் பதில் அளிப்பதே இல்லை... அதிலும், நீங்கள் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு, பதிவிலே பதில் இருக்கிறது. பதிவை ஒழுங்காக படித்து இருந்தாலே, உங்களின் கமெண்ட்டின் நீளமும், அறிவுரையின் நீளமும் சற்று கம்மியாகி இருக்கும்... என்ன செய்வது? பெரிதாக எழுத வேண்டும் என விருப்பப்பட்டு, பதிவினை முழுமையாக கூட படிக்காமல் அறிவுரையை ஆரம்பித்து விட்டீர்கள்... இப்போது இதற்கெல்லாம் பதில் சொன்னாலும் கூட, கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பீர்கள். நீங்கள் சொன்ன அறிவுரையை முழுக்க ஏற்று கொள்ளும் வரை, ஒரே விஷயத்தை வட்டமடிப்பீர்கள்... இப்போது, நான் என்ன தான் பதில் சொன்னாலும், உங்களின் ஈகோ அதை ஒப்பு கொள்ளாது, கடைசி வரை நீங்கள் சொன்ன அறிவுரையின் பக்கமே நின்று, நீங்கள் சொல்வது தான் சரி என்று வாதம் செய்வீர்கள். அதுவும் வாழ்க வளமுடன் என்ற இறுதி வரிகளோடு...  

இது போல் உப்பு சப்பு இல்லாத அறிவுரைகள் எல்லாம் எனக்கு மிகவும் வேண்டியவர்களிடமிருந்து தான் வருகிறது, இதற்கெல்லாம் நான் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடுவது தான் வழக்கம்... ஆனால், இது என்னுடைய மிகவும் பெர்சனலான விஷயம் என்பதாலும், நீங்களும் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறீர்கள் என்பதாலும், இதற்கு தகுந்த எதிர்வினை ஆற்ற கடமை பட்டிருக்கிறேன். இது போல் உப்பு சப்பு இல்லாத அறிவுரைகளுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றினால் என்ன பிரச்சனை வரும் என்றால், எதிர்த்து பேசுபவன் என்று பெயர் வந்து விழும்... வந்து விட்டு போகட்டும், புரிந்து கொள்ளாத உறவுகளை நான் கட்டாயப்படுத்துவதில்லை... அதே போல் நல்லவனாக இருத்தல் வேண்டும், என்ற கோட்பாட்டில் எனக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. காரணம் எல்லோரும் என்னை ஏறி மிதிக்கிறார்கள். அதனால் நானும் எப்பவோ கெட்டவன் அவதாரம் எடுத்து விட்டேன்...

சொல்ல போனால் இந்த வடிவுக்கரசி விஷயம் ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் வடிவுக்கரசியின் குணத்திற்கான ஒரு differential விஷயத்தை தான் அவர் செய்துள்ளார். நானும் அதற்கான ஒரு differential விஷயத்தை தான் எதிர்வினையாய் செய்துள்ளேன். இதை differential ஆக பார்ப்பதால் விஷயம் சிறியதாக தெரிந்தாலும், இதனுடைய integerration பிரம்மாண்டமானது.

ஒரு 14 வயது தாண்டிய சிறுமியை பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியுள்ளது. அந்த சிறுமியை விளையாட அனுப்புவதில்லை, ஆண் நண்பர்களிடத்து பழக விடுவதில்லை, ஆண் உறவினர்களிடம் கூட சகஜமாக பேச அனுமதிப்பதில்லை... இதெல்லாம் ஏன்? பெண்ணின் திருமணத்தில் சிக்கல் வந்து விட கூடாது என்ற முன்னெச்சரிக்கை. ஒரே ஒரு பையனிடம் பேசினால் கூட, கண் காது மூக்கு வைத்து பேச ஒரு கூட்டமே தயராக இருக்கிறது. அதிலும் பெண்கள் பங்கு அதில் சரி பாதி என்று ஒத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு கூட்டமே அடுத்தவர்களின் படுக்கை அறைகளை ஓர கண்ணால் உத்து பார்த்து கொண்டிருக்கிறது. அந்த கண்களின் மேல் கல் வீசுவது தான் என் காரண காரியம்... இதை நீங்கள் என் பதிவை படித்த போதே புரிந்திருக்க வேண்டும்... உங்களுக்கு புரியவில்லை... பெரியம்மாவாக போய் விட்டீர்கள், அதனால் விளக்கி சொல்ல வேண்டியதாய் போயிற்று... மற்றவர்களுக்கு இந்த சலுகைகளை அவ்வளவு சாதாரணமாக தர மாட்டேன். வேண்டுமானால் ப்ரவீன் வின் என்று ஒரு அன்பர் இருக்கிறார், அவரை கேட்டு பாருங்கள்... சொல்வார்.

ஒரு பைத்தியக்காரன் சாக்கடைக்குள் நின்று கொண்டு, போவோர் வருவோர் மேல் எல்லாம் சாக்கடையை வாரி இறைத்து கொண்டிருக்கிறான். அவனை தடுக்க திராணியற்று எல்லோரும் பொட்டைத்தனமாய் எதிர்க்காமல் இருக்கிறீர்கள், கேட்டால் அவனை மன்னித்தருள வேண்டும் என ஆன்மீகம் பேசுகிறீர்கள். எனக்கு அதில் உடன்பாடில்லாமல், நான் சாக்கடையினுள் இறங்கி அவன் கைகளை கட்ட பார்க்கிறேன். இப்போது நான் அவனது கைகளை கட்டும் போது அவன் அய்யோ அம்மா என்று கூப்பாடு போடுகிறான். அவன் கூப்பாடு போடுகிறானே, பாவம் அவன் என்பதால் நீங்கள் என்னிடம் பரிந்து பேசி கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலைப்பாட்டில் தான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீகள். அதுவாவது தெரிகிறதா...? என் அனுபவம் கம்மி என்றாலும், என் அனுபவத்தின் மேல் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு சொல்கிறேன்... உலகத்தின் மீதான உங்களின் ஒட்டுமொத்த பார்வையும், உங்களின் கமெண்ட்டும் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது.

நிரூபனங்கள் இதோ...

1.   //குஜராத், சிலோன் ரயிலெரிப்பு. எல்லா கொடுமைகளும் இப்படி தான் ஆரம்பமாகியிருக்கும். உறவுகளையே காயப்படுத்தி விட்டு, உலகத்தில் அமைதியை எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாகும்//

சிலோனில் ரயில் எரித்தார்கள் என்பது பற்றி நான் எங்கேயும் சொல்லவில்லை. நீங்கள் எங்கேயே தவறாக புரிந்து கொண்டீர்கள். கோத்ராவில் தான் ரயில் எரித்தார்கள் என்று கூறியுள்ளேன். இப்போது இந்த ரயில் எரித்தது எல்லாம் யார் என்று பார்த்தால், எல்லாம் பெரியவர்கள். வயது காரணமாக, மரியாதைக்குரியவர்கள். இவர்களெல்லாம் ஒரு கூட்டத்தையே துவம்சம் செய்து, எரித்து கொலை செய்கிறார்கள் என்றால் ஒரே நாளில் இவர்கள் வன்முறைக்கு பழக்க பட்டிருக்க மாட்டார்கள். முதலில் மனைவியை அடித்திருப்பான், அடுத்து பக்கத்து வீட்டுக்காரனை அடித்திருப்பான், அடுத்து பக்கத்து தெருக்காரனை கொன்றிருப்பான்... இதையெல்லாம் தாண்டி தான் அவன் இறுதியில் ஒரு ரயிலையே எரிக்கும் அளவிற்கு அவன் அவனை தயார் படுத்தியிருப்பான்... அப்படி தானே.. முதன்முதலில், அவன் அடுத்த வீட்டுக்காரனை அடித்திருந்த போதே, போலீஸ் அவனை கைது செய்து, அவனை 4 தட்டு தட்டிருந்தால், பின்னாளில் இவ்வளவு கொலைகள் அரங்கேறிருக்குமா...?

அதனால் தான் நான் ஒரு போலீஸாக இருந்து, வடிவுக்கரசியின் வாயை பூட்ட பார்க்கிறேன். பின்னாளில், இவர் இன்று பேசியது போல் வேறு யாராவது ஒரு பெண்ணை வஞ்சம் வைத்து திரித்து பேசி, அந்த பெண் அவமானத்தில் எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போய் விட கூடாது என்பதில் நான் முழு கவனத்துடன் இருக்கிறேன். ஒரு பையனாகிய எனக்கே, யாரோ ஒரு பெண்ணின் உயிர் மீது இருக்கும் பயமும் பற்றுதலும் கூட, ஒரு நவீன பெண்ணாகிய உங்களுக்கு அக்கறை இல்லாதது குறித்து ஆச்சர்யமும், கவலையும், வெட்கமும் ஒரு சேர அடைகிறேன்...

எனக்கு இந்த உலகத்தின் மீதும், இந்த உலகத்தின் மீதுள்ள மனிதர்களின் மீதும் ஒரு பிரம்மாண்ட காதல் உள்ளது. உலகத்தை சுத்த படுத்த வேண்டுமானால், அதை நான் என் வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும்... வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் நான் என் தலைமுறையினருக்கும், என் நண்பர்களுக்கும் இந்த இணையம் வாயிலாக சொல்லி கொண்டிருக்கிறேன்... உங்கள் வயது சாக்கடைகளை ஜாக்கிரதையாக இருந்து கொள்ள சொல்லுங்கள்... .     

2.   // ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பரை பாருங்கள் என்பார்கள். நண்பர்களே போதும் என்றால் நண்பரை எவ்வகையில் சரிபார்ப்பது//

உண்மையிலே சொல்கிறேன். இதை நான் 25 முறைக்கும் மேலே படித்தாயிற்று. தலை கீழாய் திருப்பி வைத்து கூட ஒரு முறை படித்து பார்த்து விட்டேன்... சத்தியமாக புரியவில்லை. பெரிதாக எழுத வேண்டும் என்ற முனைப்பில், எழுதி சாதித்தது போல்... அடுத்த முறை தெளிவாக புரியும் படி எழுதும் முனைப்பில் ஈடுப்பட்டு அதை சாதித்து காட்டும் படி தாழ் பணிந்து வணங்குகிறேன்.


3.   நாயை பற்றி உவமை சொல்லி என்னை நாய் என்று திட்டு விட்டீர்கள். நல்லது. எனக்கு நாய்கள் மிக விருப்பமானவை. ஒரு வேளை என்னை நீங்கள் மனிதன் என்று சொல்லி திட்டியிருந்தால் எனக்கு கோபம் வந்திருக்குமோ என்னவோ...

சரி, நாய் கதைக்கு வருகிறேன்... முதலில் இது போல் ஏதாவது சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டு இருக்கிறீர்களா... நாய்கள் மிக புத்திசாலியானவை, எவ்வளவு வறட்சியான சூழ்நிலையிலும் நாய்களுக்கு எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்று தெரியும். இதற்காக நாய்கள் மோப்ப சக்தியை வரமாக வாங்கி வந்திருக்கின்றன...

சரி, இந்த கதை உண்மை என்ற அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன். இப்போது யார் நாய், யார் எலும்பு துண்டு....?

நீங்கள் என்னை நாய் என்றும், வடிவுக்கரசியை எலும்பு துண்டு என்றும் உவமை படுத்துகிறீர்கள்... அப்படி தானே. அதாவது வறட்சியான சூழ்நிலை என்பதை இப்படி உவமை படுத்தலாம்... அதாவது உலகம் முழுதும் நல்லவர்கள் இருக்கிறார்கள், எனக்கு திட்ட யாரும் கிடைக்காமல், வடிவுக்கரசியை திட்டுகிறேன்... நீங்கள் என்னிடம் வந்து அப்படி திட்ட வேண்டாம் என்றும், மன்னித்து விட்டு போகுமாறும், வீணாக திட்டுவதால் என் உடல்நலம் தான் குன்றும் என்று அறிவு போதிக்கிறீர்கள்... அப்படி தானே... சரி, கிடக்கட்டும்... நான் முட்டாள் நாயாகவே இருந்து விட்டு போகிறேன்.

அதற்கு முன்...

சம்பந்தப்பட்ட பெண் வடிவுக்கரசியுடன் ஏதோ பிரச்சனை செய்து விட்டார். அதனால் வடிவுக்கரசி, வஞ்சம் வைத்து இருந்து கொண்டு, மிக சரியாக அந்த பெண்ணை இடம் பார்த்து அடித்து விட்டார். அதுவும் அந்த பெண்ணின் கற்பு விஷயத்தில்... நீங்களும் அங்கே தானே இருந்தீர்கள்.... அப்படி, வடிவுக்கரசி அந்த பெண்ணை திட்டியவுடன், வடிவுக்கரசியை கூப்பிட்டு வைத்து இந்த நாய் எலும்பு கதையை சொல்லியிருக்கலாமே... அவரிடத்து அந்த கதையை சொல்லாமல், என்னிடம் மட்டும் இந்த கதையை வந்து சொல்லும் ரகசியம் என்னவென்று நீங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும்.. அப்படியானால் அந்த பெண் திட்டு வாங்கட்டும் என்று, நீங்களும் வஞ்சம் வைத்து வடிவுக்கரசி திட்டுவதை வேடிக்கை பார்த்தீர்களா...

என்னை பார்த்தால் மாங்காய் மடையன் போல் தெரிகிறதா... அறிவுரை சொல்வது எளிது என்பதால், கிளம்பி வந்து விட வேண்டாம்.
        
வடிவுக்கரசி பழி வாங்கியதை குறித்து எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. அந்த பெண் செய்ததில் வடிவுக்கரசிக்கு ஏதும் மனவருத்தம் இருந்தால் தாரளமாக பழிவாங்கி கொள்ளட்டும். ஆனால் அதில் ஏன் என்னை இழுக்க வேண்டும். பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா? ஏன், எனக்கெல்லாம் கற்பு என்பது ஒரு சென்சிட்டிவான விஷயமாக இருக்க கூடாதா...

சரி, என்னை விடுங்கள். வடிவுக்கரசிக்கு ஒரு பெண்ணிடம் பிரச்சனை என்றால் அந்த பெண்ணை பழிவாங்குவதற்காக, அந்த பெண்ணின் கற்பு குறித்து தான் 10 பேர் முன்னிலையில் ஆபாசமாக கமெண்ட் அடித்து தன் வஞ்சத்தை தீர்த்து கொள்ள வேண்டுமா?

இப்போது எனக்கு வடிவுக்கரசியின் மேல் வஞ்சம் இருக்கிறது, நான் வடிவுக்கரசியின் கற்பு குறித்து நான் ஆபாசமாக எழுதட்டுமா....

அது எப்படி... ஒரு அருவருக்க கூடிய செயலை ஆண் செய்தால் ஆவேசமாக ஓடி வருகிறீர்கள், பெண் செய்தால் மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறீர்கள். இது, உண்மையில் ஆணாதிக்க சமூகமா, இல்லை பெண்ணாதிக்க சமூகமா என்று தயவு கூர்ந்து நீங்கள் சொல்ல வேண்டும். இதற்கு மகளிர் காவல் நிலையங்களில் கொடுக்க கூடிய அநியாய, அபாண்ட புகார்களே நிகழ்கால சாட்சியங்கள் ஆகும்... ஒரு பெண் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, ஒருவனை கை காட்டி, இவன் என்னை கற்பழிக்க வந்தான் என சொன்னாலே போதும், தூக்கி ஜெயிலில் தள்ளி விடுகிறார்கள்.

4.   // அதே போல் நீ 4 நாட்கள் உனக்குள்ளே ஒரு வஞ்சக மனத்தை உருவாக்கி கொண்டு ....//

ஒரு சிறிய திருத்தம், 4 நாட்கள் என்பது தவறான தகவல் ஆகும்... நான் எனது சிறிய வயது முதலே கொக்கு மீனிற்காக காத்து கொண்டிருப்பது போல் காத்து கொண்டு தான் இருந்தேன் J

5.   // வடிவுக்கரசியே ஆனாலும் அவளின் வாழ்க்கையே ஏமாற்றமாகி விட்டதால் வந்த வலியும், அவள இடத்தில் இருந்து பார்த்தால் அதுவும் சரியே ஆகும் //

இதையெல்லாம் தான் பிற்போக்கு சிந்தனைகள் என்று கட்டம் கட்டுகிறேன்.

ஒரு போலீஸ் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள், அவன் ஊரில் உள்ள மக்களின் ஒவ்வொருவரின் இடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தால் ஜெயிலே காலியாக தான் கிடக்கும். ஊரில் தப்பு செய்பவர்களின் இடத்தில் இருந்து பாவம் பார்ப்பதா போலீஸின் வேலை...

அப்படியானால்... நீங்கள் ஒசாமா பின் லேடன், கோத்ரா இரயில் எதிர்ப்பாளர்கள், ஊழல் அரசியல்வாதிகள், கற்பழிப்பாளர்கள், ஹிட்லர், இடி அமீன், முசோலினி, ராஜ பக்சே, தர்மபுரி பஸ் எரிப்பாளர்கள் என வரிசையாக ஒவ்வொருவரின் இடத்தில் இருந்து கொண்டும் பார்த்து அவர்களுக்கு நல்லவர்கள் சர்ட்டிபிகேட் கொடுத்து, வீட்டிற்கு கூப்பிட்டு சாப்பாடு போடுங்கள்... அதன் பிறகு அறிவுரைக்கு ஆள் தேடுங்கள்.

முதல் மரியாதை வடிவுக்கரசி விஷயத்திற்கு வருவோம்... ஊரில் குழந்தை இல்லாதவர்களே இல்லையா... எனக்கு தெரிந்த பெரும்பாலான குழந்தை இல்லா பெண்மணிகள், சாமான்ய பெண்களை விட அதிக கரிசனமும், மனிதத்துவமும் கொண்டிருக்கின்றனர். எல்லோருமா நாக்கில் நரம்பு இல்லாமல், விஷ வார்த்தைகளை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்....

6.   //உன்னை கட்டுப்படுத்தவே உன்னால் முடியவில்லையே, அம்மா அப்பா யார் சொன்னாலும்....//

நான் ஏன் என் அப்பா அம்மாவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவர்களுக்கு எங்கிருந்து அந்த உரிமை வந்தது, என்னை பெற்று எடுத்து விட்டதாலா.. நான் என்ன பொருளா, பண்டமா? இது என்ன மாதிரியான பிற்போக்கு சிந்தனை. உதாரணத்திற்கு என் அப்பா என்னை கஞ்சா கடத்த தூண்டுகிறார் என்று வைத்து கொள்வோம், எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று வைத்து கொள்வோம்... நான் என் அப்பாவின் அடக்குமுறைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது தான் உங்களின் அறிவுரையா...?

நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உங்களுக்கு யார் சொன்னது.... பதிவை ஒழுங்காக முழுதும் படித்தீர்களா....?

நான் என் முழு கட்டுப்பாட்டில் எதை செய்ய வேண்டும், எதை பேச வேண்டும் என்ற முன்னேற்பாட்டில் இருந்ததால் தான், இன்று வடிவுக்கரசி நலமுடன் இருக்கிறார்... இல்லையெனில், அன்று பேருந்தில் வைத்தே வடிவுக்கரசியை ஒரு வழி செய்து மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பேன்.

7.   இறுதியாக மன்னிப்பு பற்றி நீங்கள் எழுதியிருக்கும் விஷயமெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு சின்ன பையன் இருக்கிறான், ஐஸ் சாப்பிடுவதற்காக என்று அப்பாவின் சட்டை பையிலிருந்து சில்லறை திருடி மாட்டி கொள்கிறான். அவனை மன்னிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. பல காலமாக கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் கும்பல் வசமாக சிக்குகிறது என்றால் அவர்களையும் மன்னித்து விடலாமா?

சரி, வடிவுக்கரசியை எங்கள் வீட்டினருக்கு பல காலமாகவே தெரியும், அவரும் பல காலமாக அப்படியே தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறார், எங்கள் வீட்டு நபர்களும் தொடர்ந்து அவரை மன்னித்து கொண்டு தான் இருக்கிறார். என்ன மாறி விட்டது... வடிவுக்கரசி திருந்தி விட்டாரா...? இல்லையே, மன்னிப்புகளை advantage எடுத்து மேலும் மேலும் பேசி கொண்டு தானே இருக்கிறார்.

காந்தியை பற்றிய உங்கள் புரிதலே எனக்கு விநோதமாக இருக்கிறது. காந்தி உண்மையிலே ஒரு போராட்டக்காரர், மன்னித்து கொண்டிருக்கும் மாங்காய் மடையன் அல்ல... அநியாயத்தை கண்டால் கொதிப்பவர். அவரின் போராட்ட குணம் தான், ஆங்கிலேயர்களை துரத்தி அடித்து, நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது.  நீங்கள் சொல்வது போல், ஆங்கிலேயரின் அடக்குமுறையை மன்னித்து கொண்டிருக்கவில்லை... சுபாஷ் சந்திர போஷ், அரவிந்தர், காந்தி, பெரியார் என அவரவர் ஒவ்வொரு வழியினை தேர்ந்தெடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர். உங்கள் எல்லோரை போலவும், ப்ராய்லர் கோழிகளாக உருவெடுத்து சொரணை இல்லாமல் எல்லோரையும் மன்னித்து கொண்டிருக்கவில்லை...


உங்களின் ஒட்டுமொத்த கமெண்ட்டிலும், வடிவுக்கரசி செய்தது தவறு என்பது பற்றி, ஒரே ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. இப்படி நடுநிலையில் இல்லாத உங்களுக்கு, அறிவுரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வயது மூத்தவர், என் பெரியம்மா என்றெல்லாம் சொல்ல வராதீர்கள்... வயது, உறவு எல்லாம் ஒரு தகுதியே கிடையாது.

இப்படி ஒரு சார்புள்ள நீங்கள் இனியும் மேற்கொண்டு இது சம்பந்தமாக பேச உரிமையில்லை என்பதனை கண்டிப்புடனே சொல்லி, கெட்ட பெயரை வாங்கி கொள்கிறேன்.

உங்களை போன்று ப்ராய்லர் கோழிகளுக்கு நல்லவனாய் இருப்பதை விட, கெட்டவனாகவே இருந்து கொள்கிறேன்... எனக்கு அது சற்று சௌகரியமாக இருக்கிறது.

மற்றபடி அறிவுரைக்கு நன்றி.

அறிவுரை பிடிக்காது என்றாலும், அறீவுரை கூறும் உள்ளம் பிடிக்கும்...

                                           - SurYakumaR


 

1 comment:

  1. உங்களை பார்க்கறப்ப என்னை பார்க்கற மாதிரியே இருக்கு...

    ReplyDelete